நாளை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்புக்கான இறுதி அழைப்பிதழ் இன்று பல தளங்களில் வெளியாகியுள்ளது. பதிவர் சந்திப்பிற்கான இடத்திற்கு எப்படி வருவது என்பதில் ஆரம்பித்து முழுமையான தகவல்கள் இவற்றில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சகோதரர் மதுமதியின் பதிவை இங்கே காணலாம்.
பதிவர்கள் பேண வேண்டிய ரூல்ஸ் ரொம்பவே கவனத்தை கவருவதாக உள்ளது. புகைபிடித்தல், மது, பெண்களை அவர்கள் அனுமதியின்றி படம் பிடிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சபை நாகரிகத்தை பேணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுமதி அவர்களின் பதிவில் இருந்து,
1.அரங்கத்தில் புகைபிடித்தலை தவிர்த்துக் கொள்ளவும்.
2.மது அருந்திவிட்டு அரங்கிற்குள் நுழைவதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளவும்.
3.பெண் பதிவர்களின் அனுமதியின்றி அவர்களை புகைப்படம் எடுப்பதை தயவுகூர்ந்து தவிர்த்துக் கொள்ளவும்.அனுமதியோடு புகைப்படம் எடுக்கும் பட்சத்தில் அவர்கள் அனுமதியில்லாமல் வலையில் பதிவதை தவிர்த்துக் கொள்ளவும்.
4.ஒவ்வொரு பதிவரும் சபை நாகரீகத்தை கடைபிடிக்கவும்.
இதில் மூன்றாவது பாய்ன்ட் சான்சே இல்லை. செம டாப். இந்த வரையறைகளை மீறுபவர்கள் மீதான நடவடிக்கைகள் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது (அனுமதி மறுக்கப்படும்/அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்).
எங்கு ஒழுக்கதிற்கான விதை தூவப்படுகின்றதோ அப்போதே அதன் வெற்றியும் ஆரம்பமாகிவிடுகின்றது. அந்த வகையில் இந்த சந்திப்பு ஒரு மிகச்சிறந்த துவக்கமாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.
Hats Off organisers.....Hats off....
இந்த பதிவர் சந்திப்பில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை சிறந்த முறையில் பின்பற்றப்பட்டு, தமிழ் பதிவுலகம் மற்ற மொழிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திட மனமார்ந்த பிரார்த்தனைகள்.
விழா ஒருங்கிணைப்பாளர்களே, ஆக்கப்பூர்வமான விசயங்கள் கலந்த உங்கள் உழைப்பு அருமையானது. நீங்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் இந்த விழா அசத்தலாக இருக்கபோகின்றது (இன்ஷா அல்லாஹ்) பாருங்கள்.....அதற்கு எங்களுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்....
நன்றி: ஆஷிக் அஹமத்
Tweet | ||||