Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday 29 December 2014

அமீர்கானின் பிகே - சொல்லும் செய்தியும், சர்ச்சைகளும்...


வேற்று கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்து பூமியில் இறங்குகிறார் பிகே (அமீர்கான்)! அது இறங்கிய இடம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம். அந்த பறக்கும் தட்டின் சாவி அவர் கழுத்தில் ஜொலிக்கிறது. பூமியில் அனைவரும் தங்கள் உடம்பை மறைத்துக் கொண்டு கண்ணியமாக செல்வதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் இவரது கழுத்தில் ஜொலிக்கும் அந்த சாவியை ஏதோ விலையுயர்ந்த ஆபரணம் என்று தவறாக கருதி பிகேயிடமிருந்து பிடிங்கிக் கொண்டு ஓடி விடுகிறார். அந்த சாவி இல்லாமல் அவரது கிரகத்துக்கு திரும்ப முடியாது. எனவே அந்த சாவி எவ்வாறு கிடைக்கப் பெற்று திரும்பவும் தனது கிரகத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை.

பூமியில் மக்களிடம் பேசுவதற்காக போஜ்பூரி பாஷையை கற்றுக் கொள்கிறார் பிகே. அந்த மக்களிடம் தனது சாவி எங்கு கிடைக்கும் யாரைப் பார்க்கலாம் என்று கேட்க, 'கடவுளை பார்.. அவரிடம் கோரிக்கை வை' என்கின்றனர் எல்லோரும். 

ஒரு கடைக்கு செல்கிறார். 

'எனக்கு கடவுள் வேண்டும்'

'15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் எந்த கடவுள் வேண்டும்?' கடைக்காரர் சாமி சிலைகளை காட்டி கேட்கிறார்.

'எனது கோரிக்கை ஒன்றுதான். எல்லா கடவுளும் ஒன்றுதான் எனும் போது எனக்கு விலை குறைந்த கடவுளை தரவும்'

'அப்போ 15 ரூபாய் கடவுளை தருகிறேன்' 

கடைக்காரர் சிலையை தர வாங்கிக் கொள்கிறார் பிகே. 

அடுத்து கதாநாயகி ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமை (அஃப்ராஸ்) பெல்ஜியத்தில் காதலிக்கிறாள். இந்த செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவிக்கிறார். 'இந்துவாக எங்கள் குடும்பத்தில் பிறந்த நீ ஒரு முஸ்லிமை காதலிப்பதா? கூடாது இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று எதிர்க்கின்றனர் பெற்றோர். கதாநாயகியின் தந்தை தனது குருவான துறவியிடம் இந்த செய்தியை கொண்டு செல்கிறார். 

'பாகிஸ்தானிகள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள். உனது வாழ்வு வீணாகி விடும்' என்று அந்த துறவி கதாநாயகியை மிரட்டுகிறார். 'இல்லை! எனது காதலன் எனக்கு நம்பிக்கை துரோகியாக மாட்டான். நான் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கண்டிப்புடன் கூறி தொடர்பை துண்டிக்கிறாள் கதாநாயகி.

அந்த துறவி சொன்னது போல் நம்மை இந்த பாகிஸ்தானி ஏமாற்றி விடுவானா என்ற யோசனையில் ஆழ்ந்த போது காதலனும் அருகில் வருகிறான். 

'நாம் நாளை திருமணம் முடிக்கிறோம்' - இது நாயகி

'ஏன் என்ன அவசரம்?' -பாகிஸ்தானி

'அதெல்லாம் ஒன்றுமில்லை. நாளை நமது திருமணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கிறது. மறக்காமல் வந்து விடு'

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபிஸில் கதாநாயகி காத்திருக்கிறாள். ஆனால் சிறுவனொருவன் ஒரு காகிதத்தை கொடுக்கிறான். அதில் 'மன்னிக்கவும். திருமணம் முடிக்கும் மன நிலையில் நான் இல்லை' என்று எழுதியிருந்தது. தனது பெற்றோரும் துறவியும் சொன்னது சரியாகி விட்டதே என்று எண்ணி அழுதவளாக இந்தியா திரும்புகிறாள். ஆனால் இந்த பெண்ணை குடும்பத்தில் பெற்றோர் சேர்க்கவில்லை. எனவே ஒரு செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக சேருகிறார். 

அங்குதான் பிகேயை சந்திக்கிறாள். அதன் பிறகு பாகிஸ்தானி அவளை ஏமாற்றவில்லை, அந்த துண்டு சீட்டு வேறொரு பெண்ணுக்கு வந்தது, தவறாக கதாநாயகியிடம் கொடுக்கப்பட்டது என்பதை பிகே வெளிப்படுத்தி எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை விளக்குகிறார்.

இந்து, கிறித்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதத்தையும் இந்த படத்தில் ஒரு பிடி பிடிக்கிறார் இயக்குனர். மூன்று மதங்களிலும் புரோகிதம் எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை அழகாக விவரிக்கிறார். 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது' என்று இஸ்லாம் சொல்லவில்லை. பிறகு ஏன் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்கள்? அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்?' என்ற கேள்வியையும் வைக்கிறார் டைரக்டர். இந்த கேள்வியானது, தாலிபானிய மனப்போக்கு கொண்டவர்களை பார்த்து கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. 

கடவுளுக்கு நாம் கோரிக்கை வைக்க இடையில் இந்த இடைத்தரகர்களான புரோகிதர்கள் எதற்கு என்று பல இடங்களில் கேள்வி கேட்கிறார். "ஒரு தாய் தனது குழந்தைக்கு பசியறிந்து சோறு ஊட்டுகிறாள். அதற்கு காணிக்கை எதுவும் வாங்குவதில்லை. தாயை விட மேலான இறைவனிடம் கோரிக்கை வைக்க உண்டியலில் பணத்தை போடச் சொல்கிறீரே! இப்படி உண்டியலில் பணம் போடச் சொல்லி கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டாரா?' - சரியான கேள்வி தான். 

இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்றும், மக்கள் பார்க்க கூடாதென்றும் சிலர் சர்ச்சைகளை ஏற்படுத்துவது கவலைக்குரியது. இன்று நாட்டின் சில இடங்களில் திரையரங்குகள் நொறுக்கப்பட்டுள்ளன. சமயங்களில் சொல்லப்படாத பழக்கங்களை விட்டொழிப்பது தான் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு வழிவகுக்கும். இதற்கு எந்த மதமும்/மார்க்கமும் விதிவிலக்கல்ல. 

Wednesday 24 December 2014

ஜார்கண்ட் & ஜம்மு காஷ்மீர் - சறுக்கிய பாஜக


று மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் சுமார் 10% வாக்குகளை ஜார்கண்டில் இம்முறை பாஜக இழந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 70 தொகுதிகளில் (வாக்கு சதவித ஒப்பீடு) வென்ற பாஜகவிற்கு இம்முறை தனித்து ஆட்சியமைக்கும் அளவு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. 

அது போல, நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீரில் 8% வாக்குகளை பாஜக இழந்துள்ளது. மேலும் காஷ்மீரில் போட்டியிட்ட 34 பாஜக வேட்பாளர்களில் 33 பேர் டெபாசிட் இழந்தனர். ஒருவர் கூட பாஜக சார்பாக காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்க படவில்லை. 

சறுக்கல்களுக்கு எல்லாம் கிரீடமாக mission 44  என்று அதிகப்படியான பிரச்சாரங்களை மேற்கொண்ட மோடிக்கு அவ்இலக்கின் பக்கத்தில் வரும் வாய்ப்பு கூட கிட்டவில்லை. வெள்ள நிவாரணம், இராணுவ வீரர்கள் சந்திப்பு, தேர்தல் பிரச்சாரம் என்று எதுவும் மோடிக்கு பயனளிக்கவில்லை. 

இந்த இரு மாநிலங்களில், சுமார் 30 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மோடி கலந்துக்கொண்டுள்ளார். நவம்பர் மாதம் அவர் தன் அலுவலகத்தில் (பிரதமர் அலுவலகம்) இருந்தது 1.5 நாட்கள் மட்டும் தான் என்றால் தேர்தல் பிரச்சார வீரியத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம். அப்படியும் இவர்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. 

பாஜக பெரும் வெற்றியை பெறும் என்ற தேர்தல் கணிப்புகளும் பொய்பிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் சில, ஜார்கண்ட்டில் 60 இடங்கள் வரை பாஜக பெறும் என்று கூறியதை இங்கு நினைவு கூறுவது ஏற்புடையதாக அமையும்.  
ஏனோ, இந்த முடிவுகளால், பாஜக மட்டுமல்ல சில ஊடகங்களும் துவண்டு தான் போயிள்ளன.  

ஆதாரம்: தேர்தல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளம்: http://eciresults.nic.in/

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday 10 December 2014

உத்திரபிரதேச மத மாற்ற விவகாரம் - அம்பலமாகும் உண்மைகள்.


உத்திர பிரதேசத்தில், ஆக்ரா நகரின் புறநகர் பகுதியில், சுமார் 60 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு சங்பரிவாரங்களால் மாற்றப்பட்டதாக செய்தி வெளியானது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை தேசிய ஊடகங்கள் இன்று அம்பலப்படுத்தியுள்ளன. 


மிக ஏழ்மையான நிலையில் இருக்கும் இந்த 60 குடும்பங்களும் பங்களாதேஷ் அல்லது மேற்கு வங்கத்தில் இருந்து உத்திரபிரதேசத்திற்கு குடியேறியவர்கள். மதம் மாறியதாக சங்பரிவாரங்களால் கூறப்படும் இவர்களில் பெரும்பாலானோர் 25 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியவர்கள். 

கடந்த 17 வருடங்களாக இப்பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு ரேஷன், வாக்காளர், ஆதார் அட்டைகள் என்று எதுவும் இல்லை. இந்த சூழ்நிலையை பயன்படுத்தியே சங்பரிவாரங்களால் அந்நிகழ்ச்சிக்கு தாங்கள் சிக்கவைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். 

முனிரா என்பவர் கூறும் போது, இந்த வைபவத்தில் கலந்துக்கொண்டால் நிலம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று சங்பரிவாரங்களால் தாங்கள் ஆசைக்காட்டப்பட்டதாகவும் (இதனை பஜ்ரங்தல்லின் விழா ஏற்பாடடாளர் சவுஹான் உறுதிப்படுத்தியுள்ளார்), மேலும், "தீயை கொண்டு நிகழ்த்தப்படும் அந்நிகழ்ச்சிக்கு நாங்கள் அழைத்து செல்லப்பட்டு, உட்கார வைக்கப்பட்டோம். அச்சத்தில் இருந்த நாங்கள் ஹிந்து கடவுள்களை வழிபட கூறப்பட்டோம். அவர்கள் சொன்ன அனைத்தையும் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் மறுபடியும் குர்ஆனை தான் ஒதுகின்றோம். என் குடும்ப உறுப்பினர்கள் இன்று தொழுகையையும் நிறைவேற்றினார்கள்" என்று கூறுகின்றார்.

"இது மதமாற்ற நிகழ்வு என்றே எங்களுக்கு தெரியாது. நாங்கள் முஸ்லிம்கள், இனியும் அப்படியே தொடர்வோம்" என்கின்றார் அவர்களில் ஒருவரான நூர் முஹம்மத். இதே போன்ற தகவலையே தெரிவிக்கின்றார் மற்றொருவரான இஸ்மாயில்,"நாங்கள் இஸ்லாமியர்கள். ஹிந்து மதத்திற்கு நாங்கள் மாறவே இல்லை". 

கடுமையான சூழ்நிலையில் வாழும் தங்களை நாற்பது-ஐம்பது பேர் சூழ்ந்து நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு மிரட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று வினவுகின்றனர் இம்மக்கள். 

தாங்கள் மதம் மாறவில்லை என்று இவர்கள் அறிவித்திருப்பது சங்பரிவாரங்களை கொதிப்படைய செய்துள்ளது. வெளி உலகின் அழுத்தத்தாலேயே இவர்கள் மறுபடியும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு திரும்பி விட்டதாக அவர்கள் புகார் செய்கின்றனர். 

அவரவர் விரும்பும் சமயத்தை பின்பற்ற/மாற அனைவரும் உரிமையுண்டு. ஆனால் கட்டாயப்படுத்தி/ஆசைக் காட்டி மதமாற்றுகின்றார்கள் என்று கிருத்துவ மிஷனரிகள் மீது குறை கூறும் சங்பரிவாரங்கள் அதே செயலை தாங்கள் செய்வதற்கு என்ன பெயர் என்று கூற வேண்டும்.

அதே சமயம், இந்த விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிரொலித்தது. பகுஜன் சமாஜ் முன்மொழிந்த இப்பிரச்சனையை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்தனர். இவ்விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது மாநில விவகாரம் என்பதால் இதில் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

மோடி பதவியேற்றதில் இருந்து இன/மொழி/மதரீதியான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தி ஹிந்துவில் இதுக்குறித்த செய்திக்கு பின்னூட்டமிட்டவர்கள் கூறியுள்ளனர். அது தான் நிதர்சனமான உண்மையும் கூட...

நன்றி: 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Tuesday 2 December 2014

சாத்வி நிரஞ்சன் ஜோதி உண்மையில் பேசியது என்ன?


மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி விவகாரத்தில் (சில) தமிழ் ஊடகங்கள் முழுமையான செய்தியை தரவில்லை. முஸ்லிம்களும் கிருத்துவர்களும் இராமரின் பிள்ளைகள் தான் என்று கூறியதற்காகவே இவ்வாறான சர்ச்சை வெடித்துள்ளதாக செய்தி சொல்கின்றனர்.


உண்மையில் இதையும் தாண்டிய விஷ கருத்துகளை சாத்வி தெரிவித்தது தான் உண்மை. 

அதாவது, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில், 

"நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்?, இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?" 

என்று விஷத்தை கக்கியது தான் இவ்விவகாரம் பூகம்பமாய் வெடித்ததற்கு காரணம். ஆதாரம் இங்கே 

"முறைகேடாக பிறந்தவர்கள்" என்ற பதத்திற்கு அவர் பயன்படுத்திய ஹிந்தி வார்த்தையை ஆங்கில ஊடகங்கள் சில கூட (நான் போட்டுள்ளது போல) *** என்று போட்டு தான் விவரிக்கின்றனர். அப்படியானால் இந்த அமைச்சரின் வார்த்தை பயன்பாடு தரத்தை நாம் புரிந்துக்கொள்ளலாம்.


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மன்னிப்புடன் விடாமல் அவர் விலக வேண்டும், அவர் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து போக செய்துள்ளனர்.

எச்.ராஜா, சாத்வி போன்றவர்கள் பாஜகவின் தரத்தை நிர்ணயிக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல.

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: படங்கள் பெறப்பட்ட இணைய தளங்கள். 

Thursday 10 April 2014

புதிய சர்ச்சை: நான் திருமணமானவன் - ஒப்புக்கொண்ட மோடி..


தேர்தல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு நிகழ்வாக, தான் மணமானவன் என்பதை முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார் மோடி. 

இதுநாள்வரை தான் ஒரு பிரம்மச்சாரி என்று (பொய்) கூறி வந்த அவர், நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவில், ஜஷோதாபென் தன் மனைவி என்று குறிப்பிட்டுள்ளார். 2001, 2002, 2007, 2012 தேர்தல்களில் இந்த கேள்வியை வெறுமனே விட்டு வந்த மோடி, தேர்தல் துறையின் நடவடிக்கையால் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதே தற்போது உண்மை வெளிவந்துள்ளதற்கான காரணம். 

நேற்று காலையே வேட்புமனுவை மோடி தாக்கல் செய்துவிட்ட நிலையில், குஜராத் தேர்தல் துறையின் தளங்களில் இன்று அதிகாலை மட்டுமே இந்த படிமங்கள் பதிவேற்றப்பட்டுள்ளது மர்மமாக உள்ளது. இன்று, 14 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடப்பது இது தொடர்பில் குறிப்பிடத்தக்கது. 

Feb 17-ல், தான் ஒரு பிரம்மச்சாரி என்று டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு மோடி அளித்த பேட்டி

மோடி ஆதரவாளர்கள் முதற்கொண்டு பலரும் இதுக்குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டு வரும் தருணத்தில் பின்வரும் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

* இன்று ஒப்புக்கொள்ளும் மோடி, தன் திருமணம் குறித்த உண்மைகளை இதுநாள்வரை மறைத்து பொய் சொன்னதற்கான காரணம் என்ன?

* ஒரு மனைவிக்கான இன்ப துன்பங்களை இழந்த ஜஷோதாபென் செய்த தவறு தான் என்ன?

* ஒரு பெண்ணிற்கான மரியாதை உங்கள் அகராதியில் இதுதானா?

* தனக்கு இருப்பது இந்த வேலை மட்டுமே, மோடி குறித்து எதையேனும் கூறி தன் வேலையை இழக்க விரும்பவில்லை என்று ஜஷோதாபென் கூறினாரே அதற்கு அர்த்தம் தான் என்ன?

* தன் மனைவியை தனிமையில் வாடச்செய்வதையும் பொருட்படுத்தாமல் செயல்படும் உங்கள் கொள்கை என்ன?

* பொய் பொய் இதுதான் மோடி என்பதற்கான மறு பெயரா?


ஆதார சுட்டிகள்: 




Saturday 5 April 2014

மோடியை கிழித்த தி எக்கனாமிஸ்ட், கொதிக்கும் பாஜக...


லகின் பிரபல ஊடகங்களில் ஒன்றான தி எக்கனாமிஸ்ட், மோடி போன்ற ஒருவர் இந்தியாவை ஆள தகுதியில்லை என்று கூறி பாஜகவை கொதிக்க வைத்துள்ளது, கூடவே மோடி ஆதரவாளர்களையும் தான். 

இதற்கு காரணமாக குஜராத் படுகொலைகளை சுட்டிக்காட்டியுள்ள தி எக்கனாமிஸ்ட், "குஜராத் படுகொலைகளுக்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, இதனாலேயே இவ்வழக்கு முடிவு பெறாமல் இருக்கின்றது. தன்னுடைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, குஜராத் படுகொலைக்களுக்கான விளக்கத்தை மோடி தந்திருக்க வேண்டும். மன்னிப்பும் கேட்டிருக்க வேண்டும். ஆனால் இதுக்குறித்த கேள்விகளுக்கு மோடி பதிலளிக்க மறுக்கின்றார். முஸ்லிம்களின் அச்சத்தை போக்க முயற்சிக்காமல் அதனை ஊக்கப்படுத்திவதில் முனைப்பாக உள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான வாக்கு வங்கியை குறிவைத்து அவற்றை வளர்த்துக்கொண்டிருக்கின்றார்" என்று படுகாட்டமாக விமர்சிக்கின்றது.

தங்கள் பிரதம வேட்பாளரின் தகுதி ஆதிக்கமிக்க சர்வதேச ஊடகங்கள் வரை அசிங்கப்படுவதை அறிந்த பாஜக இதுக்குறித்து கொதித்துக்கொண்டிருக்கின்றது. இங்குள்ள நிலைமையை அறியாமல் எக்கனாமிஸ்ட் பேசுவதாக பதறுகின்றது பாஜக. ஒரு பிரதம வேட்பாளர் இவ்வளவு எதிர்மறை விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவது நான் அறிந்து இதுவே முதல் முறை. 

"ராகுல் காந்தி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுமா என்று தெரியவில்லை. ஆனால் பாதிப்பு குறைவு என்ற கருத்தோட்டத்தில் அதனையே இந்தியர்களுக்கு பரிந்துரைக்கின்றோம்" என்றும் கூறியுள்ளது எக்கனாமிஸ்ட். 

ஏற்கனவே குஜராத் முன்னேற்றம் இத்தியாதி இத்தியாதி என்று எல்லாம் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எக்கானாமிஸ்ட்டின் இந்த கட்டுரை தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.. 


கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday 2 April 2014

குஜராத் முன்னேற்றம்? - பாஜகவிற்கு மற்றுமொரு பலத்த பின்னடைவு...



ந்தியாவின் உற்பத்தி தொழிற்சாலைகள் & அவை ஏற்படுத்தும் வேலைவாய்ப்புகள் குறித்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் (2011-2012 காலக்கட்டத்திற்கானது) வெளிவந்துள்ளன. இன்னும் பொதுவில் வெளியிடப்படாத இம்முடிவுகளை தி ஹிந்து ஆங்கில இதழ் சில மணி நேரங்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிமுக ஆளும் தமிழகம் முதல் இடத்திலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா & ஆந்திரா முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன. பாஜக ஆளும் குஜராத்தோ நான்காம் இடத்தையே பிடித்துள்ளது. 

இதில் அதிமுகவை தவிர்த்து, காங்கிரஸ் ஆந்திராவில் கடந்த பத்து ஆண்டுகளாகவும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு சவாலாக திகழும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும், குஜராத்தில் பாஜக கடந்த பதினைந்து ஆண்டுகளாகவும் ஆட்சியில் இருப்பது குறிப்பட்டத்தக்கது. உற்பத்தி தொழிற்சாலைகள் போல பணவீக்க கட்டுப்பாட்டிலும் பாஜக ஆளும் மாநிலங்கள் பின்னடைவிலேயே இருப்பதாக சில நாட்களுக்கு முன்பாக வந்த மற்றொரு ஆய்வு கூறியிருந்தது. 

ஆய்வு முடிவுகளை விளக்கும் படம். 

வகுப்புவாத கலவரங்கள் மற்றும் இன்ன பிற செயல்பாடுகளின் மூலம் மக்களை பிளவுப்படுத்தி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து கொண்டிருக்கும் பாஜக, தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்ற முகமூடி அணிந்து இம்முறை பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றது. ஆனால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் தான் இந்த பிரச்சனைகள் அதிகமிருக்கின்றன. குஜராத் வளர்ச்சி என்னும் பிம்பம் ஏற்கனவே பலரால் அம்பலப்படுத்தப்பட்ட நிலையில், இந்த முகமூடியும் அந்தோ பரிதாபம் என்று கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றது. 

Gujarat Development Model??? 


கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Tuesday 18 March 2014

மோடி - விக்கிலீக்ஸ் விவகாரம்: பூகம்பமாய் வெடிக்கின்றது...



விக்கிலீக்ஸ் பெயரை பயன்படுத்தி பாஜகவினர் விளம்பரம் தேடிக்கொண்ட விவகாரம் பூகம்பமாய் வெடித்திருக்கின்றது. 

"ஊழலுக்கு இடம் கொடுக்காதவர் மோடி என்பது அமெரிக்காவுக்கு தெரிந்ததால் தான் அவர்கள் மோடியை கண்டு அஞ்சுகின்றனர்" - இப்படியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கூறியதாக பாஜகவினர் பரப்புரை செய்து வந்தனர். (அந்த படம் கீழே)


"ஊழலுக்கு இடங்கொடுக்காதவர் மோடி என்று விக்கிலீக்ஸ்சே சொல்லிவிட்டது" என்பதான பரப்புரைகளை தொடர்ந்து பாஜகவினர் கையாண்டு வந்ததால், இதுக்குறித்த விளக்கத்தை காட்டமான முறையில் ட்விட்டரில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 

"நரேந்திர மோடியின் பாஜக கட்சி, இம்மாதிரி போலியான விளம்பரங்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றது. ஆனால், அசாஞ்சே அப்படியான எதையும் கூறவில்லை" என்பது தான் அந்த ட்வீட். (படம் கீழே)


விக்கிலீக்ஸ்சின் இந்த அதிரடி தாக்குதல் பலரையும் கதிகலங்க வைத்துள்ளது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த அர்விந்த் கெஜ்ரிவால், இவையெல்லாம் போலி என்று தான் முன்பே கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார். காங்கிரசோ, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, "போலியான விளம்பரங்களை நாங்கள் என்றுமே விரும்பியதில்லை, எங்களின் பணியே பேசும்" என்று கூறி அவர்களின் சாதகனைகளாக நினைப்பவற்றை பட்டியலிட்டு ஆயிரக்கணக்கான லைக்ஸ்சை தேற்றிக்கொண்டுவிட்டது. 

இது ஒருபுறம் இருக்க, பாஜக இப்படியான விளம்பரங்களில் ஈடுபடவில்லை என்றும், விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தங்களுக்கு தேவையில்லை என்றும் லைன் கட்டி கூறிக்கொண்டுள்ளனர் பாஜக தலைவர்கள். ஒரு பொய்யை மறைக்க எத்தனை பொய்களை கூறுவீர்கள் பாஜக தலைவர்களே? புலியைக் கூட மறைத்து வைக்க முடியும், புகையை முடியுமா? 

பாஜக தலைவர்களில் ஒருவரான ப்ரீத்தி காந்தி தங்களின் பெயரை பயன்படுத்தி மோடிக்கு விளம்பரம் தேடியதை ட்விட்டரும் களவுமாக அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ். 


இதுமாட்டுல்ல, தன்னைப் பற்றி ஊழலுக்கு இடங்கொடுக்காதவர்(??) என்று விக்கிலீக்ஸ் கூறியதாக செய்தி வந்த போது இதற்கென ஒரு தனிப்பதிவே மோடியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியானது. அதில், இதுக்குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டிருந்தார் மோடி (பார்க்க ஆதாரம்



விக்கிலீக்ஸ்சின் சான்றிதழ் தேவையில்லை என்றால் எதற்காக தனி போஸ்ட் & விளம்பரம்? 

பித்தலாட்டங்கள் பல வகை, அதில் பாஜகவினர் செய்வது ஒரு வகை. ஆனால் என்ன, ஒவ்வொருமுறையும் அந்த முகமூடி கிழித்து தொங்கவிடப்படுகின்றது என்பது தான் அவர்களுக்கான பிரச்சனை. 

கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 
நன்றி: DNA India

Thursday 27 February 2014

தமிழர் நலம் - புதைத்து விடுவோம் - பாஜக


மிழர் நலம் குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தி ஹிந்து இதழிற்கு அளித்துள்ள பேட்டியை பாருங்கள். தமிழ் உணர்வு, இன உணர்வு என்று சொல்லிக்கொண்டு பாஜகவிற்கு கொடி பிடிப்பவர்களின் கூடுதல் கவனத்திற்கு இந்த பதிவு. மற்றவர்கள் இந்த நகைச்சுவையாளரின் பேட்டியை படித்து வயிறு குலுங்க சிரிக்கலாம். 

The Hindu: இலங்கையின் வட பகுதியை புலிகள் சுற்றிவளைத்தபோது, சந்திரிகா அரசு வேண்டுகோளுக்கு இணங்க, ‘முற்றுகையை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய ராணுவத்தை அனுப்புவோம்’ என மிரட்டியது வாஜ்பாய் அரசுதானே?

Rajnath Singh: நீங்கள் கேட்பது மிகவும் பழைய விஷயம். இதுபோன்ற பழைய சம்பவங்களை ஒரே அடியாகப் புதைத்துவிடுவதுதான் நல்லது. இந்த விஷயத்தில் வாஜ்பாய் அரசு என்ன முடிவு எடுத்தது எனத் தெளிவாக என் நினைவுக்கு வரவில்லை!

(ஆஹா என்னவொரு பதில்!!! ஒரேடியாக புதைத்துவிடுவது நல்லதாம். பாஜகவிற்கு ஆதரவளிக்கும் தமிழின உணர்வாளர்களே சொல்லுங்க எல்லாத்தையும் புதைத்துவிட்டு போய் விடுவோமா?...இன்று இதை சொன்னவர்கள், ஒரு வேலை ஆட்சிக்கு வந்து இனப்படுகொலை எல்லாம் பழைய சம்பவம், மறந்துவிடுவோம் என்று சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?..Note this point... தங்களின் முந்தைய அரசு என்ன முடிவு எடுத்ததென்று கட்சியின் தலைவரான இவருக்கே தெரியாதாம்...அட்ரா சக்க...அட்ரா சக்க...)

The Hindu: தமிழர்களின் படுகொலையில் மனித உரிமைகளை மீறிய ராஜபக்‌ஷ மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இதை உங்கள் தலைமை வலியுறுத்தாதது ஏன்?

Rajnath Singh: நோ கமென்ட்ஸ்!

(சூப்பரப்பு...நீங்க நோ கமென்ட்ஸ்னு சொல்லிருக்கலாம். ஆனா அதுக்கு என்ன அர்த்தம்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. ராஜபக்சே மேல அவ்ளோ பாசம்ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்)

The Hindu: ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலையைத் தமிழக பா.ஜ.க. வரவேற்கிறது, தேசியத் தலைமையோ எதிர்க்கிறது. ஏன்? பல்வேறு விஷயங்களில் மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் வேறுபட்டுப் பேசுவது ஏன்?

Rajnath Singh: எங்களது ஒரு தேசிய கட்சி. இதன் மாநிலம் மற்றும் தலைமைக்கு இடையே இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. நீங்கள் கூறுவது எனக்குப் புதிய தகவலாக உள்ளது. இதுகுறித்துத் தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் பேசுவோம். இனி இதுபோன்ற தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

(இது உலக மகா நடிப்பு சார்... ஒரு நிருபர் சொல்லி தான் உங்க மாநில கிளைல என்ன நடக்குதுன்னு தெரிந்துக்கொள்கின்ற நிலையில் இருக்கீங்க...இதுல நீங்க அந்த கட்சிக்கு தலைவர் வேற...சபாஷ். சரி விடுங்க, இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாதுல்ல, அப்ப சீக்கிரமே முடிவு பண்ணி யார் சொல்றது சரின்னு அறிக்கை விடுங்க)

The Hindu: உங்கள் அணியில் இணைந்துள்ள வைகோ, சேர இருக்கும் பா.ம.க-வும் கூட வரவேற்கிறார்களே?

Rajnath Singh: (லேசான புன்னகையுடன்) இது விஷயமாக அவர்களிடம் பேசுவோம். 

(என்னத்த பேச போறீங்க...அடங்கப்பா ஆள விடுங்க)..

இப்படி ஒரு பொருந்தா கூட்டணி உங்களுக்கு தேவையா வை.கோ மற்றும் தமிழின உணர்வாளர்களே? சொன்னது சு.சாமி போன்ற ஆட்கள் அல்ல, பாஜகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர். பாஜக ஆட்சி கட்டில் ஏறினால் தமிழினத்திற்கு விடிவு பிறக்கும் என்று சிலர் கூறுவதை பார்க்கும் போது over to Rajnath Singh and BPJ's policies என்பதை தவிர வேறு எதுவும் கூற தோன்றவில்லை. 

நன்றி: தி ஹிந்து 
கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Wednesday 26 February 2014

முஸ்லிம்களே ஒருமுறை வாய்ப்பளியுங்கள் - பாஜக தொபுக்கடீர்..


"மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு, அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் இஸ்லாமியர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

'பிரதமர் பதவிக்கு மோடி - இலக்கு 272-ல் இஸ்லாமியர்களின் பங்கு' என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பேசியது:

'நான் சொல்வதை தயவுசெய்து குறித்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதாவது, எங்கேயாவது எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு நேர்ந்திருந்தால், நாங்கள் தலை வணங்கி மன்னிப்புக் கோருவோம் என்று உறுதியளிக்கிறேன்.

பாஜக, இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. இந்த விஷயத்தில் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தை இஸ்லாமிய சமூகத்தினர் நம்ப வேண்டாம். தேச நலனைக் கருத்தில்கொண்டு, இஸ்லாமியர்கள் இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

எங்களை ஒருமுறைத் தேர்வு செய்து பாருங்கள். உங்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை எனில், எங்களுக்கு அதன்பின் ஒருபோதும் ஆதரிக்க வேண்டாம்.

ஓர் அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக அல்லாமல், சகோதரத்துவமும், மனிதநேயமும் மிக்க வலிமையான தேசத்தை உருவாக்குவதற்கு இஸ்லாமிய சமூகத்தினர் பாஜகவை ஆதரிக்க வேண்டும்' என்றார் ராஜ்நாத் சிங்"

நன்றி: தி ஹிந்து. 

தேர்தல் வருவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தடிக்க போகின்றதோ பாஜக. 

ராஜ்நாத் சிங் அவர்களே, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது' என்ற பழமொழி உங்களுக்கு அப்படியே பொருந்துகின்றது. செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி பேசும் போது கொஞ்சம் கூட உங்க மனசாட்சி உறுத்தவில்லையா? 

வாய்ப்பு என்பது யாருக்கு வழங்கப்பட வேண்டியது? தேளை மடியில் வைத்துக்கொன்டு அது கொட்டாது, பயப்படாம இருங்க என்று கூறுபவர்களுக்கு வழங்கப்படுவதா வாய்ப்பு? வகுப்புவாத சித்தாந்தங்களை தன் அடிப்படையிலேயே வைத்துக்கொண்டுள்ள நீங்கள் இப்படியாக பேசும் போது கொஞ்சம் கூட யோசிக்க தோன்றாதா?

அத்வானி நடைப்பயணம், பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரம், குஜராத் இனப்படுகொலை, முஸாபர்நகர் வகுப்பு கலவரம் இத்யாதி இத்யாதி என்று வரிசையாக மக்களின் இரத்தத்தை குடித்துவிட்டு இன்று முஸ்லிம்களின் பக்கம் தொபுக்கடீர் என்று விழுகின்றீர்களே உங்களையெல்லாம் எந்த கணக்கில் சேர்த்துக்கொள்வது? 

அதிலும் மோடி போன்ற ஒருவரை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, நீங்கள் பேசக்கூடிய தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கும் நிலையில் எல்லாம் முஸ்லிம்கள் இல்லை. நீங்கள் ஏற்படுத்திய வகுப்புவாத காயங்களின் வடு ஆறாமல் உறுத்திக்கொண்டிருக்கின்றது. தேர்தல் களத்தில் சந்திப்போம் அய்யா. எங்களின் வேதனையை உணர்ந்த முஸ்லிமல்லாத சகோதரனோடு இந்திய முஸ்லிம் ஒவ்வொருவனும் உங்கள் தோல்விக்காக பாடுபடுவான். 

உங்கள் பேச்சை படிக்கும் போது, இம்சை அரசன் படத்தில் தியாகு சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வந்து தொலைகின்றது. "படுத்தே விட்டாரையா"


Sunday 23 February 2014

சிறு தானிய உணவு திருவிழா...


"ஐந்திணை மற்றும் தளிர்கள், தர்மபுரியில் ஏற்பாடு செய்திருந்த சிறு தானிய உணவு திருவிழாவில் நேற்று நான் கலந்திருந்தேன், அருமையான நிகழ்வாக அமைந்திருந்தது. நல்ல கூட்டம், நான் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. நல்ல விடயங்களை கேட்க கட்டணம் செலுத்தி இவ்வளவு மக்கள் வந்திருந்தது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது. அதில் அதிகமான பெண்கள் என்பது இன்னும் ஆச்சரியம் தான். நாம் மக்களை அணுகும் போது இன்னும் நேர்மறையாக அணுக வேண்டும் என உணர்ந்து கொள்ள முடிந்தது.



நம் தமிழ் மண்ணுக்கும் தமிழனுக்கும் ஏற்ற உணவுகள் சிறு தானியங்கள் (கம்பு, சாமை, திணை, சோளம், குதிரைவாளி மற்றும்....) தான் என அழகாகவும் உறுதியாகவும் கூறப்பட்டது, மாற்று வாழ்வியலுக்கான அடிப்படை தேவைகளான மாற்று உணவு (மரபு உணவு), மாற்று மருத்துவம், மாற்று கல்வி முறை மற்றும் மாற்று பொருளாதார கொள்கை போன்றவற்றை பற்றிய தெளிவான பார்வையை புரிய முடிந்தது. 

நாட்டில் நடக்கும் அனைத்து கொள்ளைகளுக்கும், கொலைகளுக்கும், வள சூறையாடல்களுக்கும் இங்குள்ள ஒவ்வொரு தனி மனிதனும் பொறுப்பேற்று கொள்ள வேண்டும் கூறிய செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ் அவர்களின் வார்த்தைகள் இன்று நாம் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு சுயநலவாதியாக மாறிபோய் உள்ளோம் என உணர்த்தியது. இன்று தண்ணீரின் தேவையை கொண்டும் மின்சாரத்தின் அவசியத்தை கொண்டும் ஆளும் அரசாங்கங்கள் மக்களை எவ்வாறெல்லாம் அடக்கி ஒடுக்குகின்றன என்பதையும் அதன் பின்னாடி நடைபெறும் பன்னாட்டு அரசியலை பற்றியும் தெளிவாக முன் வைத்தார். 



அடைக்கபட்ட சூழலில், அடக்கு முறையால் கல்வியை கற்று தரும் மெக்காலேயின் கல்வி முறை அவர்களுக்கு தேவையான அடிமைகளை உருவாக்கி தரலாம், டாக்டர்களை, எஞ்சினியர்களை உருவாக்கலாம் ஆனால் சமூகத்து தேவையான நல்ல மனிதர்களை ஒரு நாளும் உருவாக்காது, இயற்கையை ஒட்டிய சுதந்திரமான சிந்தனையை வளர்க்கும் கல்வியே காலத்தின் தேவை, என்று முழக்கமிட்ட மீனாட்சி உமேஷின் வார்த்தைகள் ஆழமான அர்த்தத்தை கொண்டவை. 

மாற்று மருத்துவம் குறித்து உரையாற்றிய உமர் பாரூக், இன்றைய தேவை என்பது மாற்று அல்ல மரபு வாழ்வியலே, அது நம்மிடம் தான் உள்ளது, நமக்குள்ளே உள்ளது. இன்றைய அலோபதி மருத்துவம் என்பது மேலை நாடுகளின் மருந்து வியாபாரம் தானே தவிர மனித நலம் சார்ந்தது அல்ல என கூறி இன்றைய அலோபதி டாக்டர்களின் வியாபார முகத்தையும், தேசம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சந்தையாக இருப்பதையும் தோலுரித்தார்.

இறுதியாக செந்தமிழனின் உரை அமைந்திருந்தது, நிலைக்கு திரும்புவோம் எனும் உரையில் மரபு வாழ்வியலின் அவசியத்தையும், இயற்கை சார்ந்து வாழ்வதையும் அதனை போற்றி பாதுகாப்பதையும் இல்லையேல் நாளைய தலைமுறை உணவுக்காக தேடி திரியும் நிலை ஏற்படும் என உணர்த்தினார், இன்றைக்கு நாமெல்லாம் எந்த அளவுக்கு பணம் தயாரிக்கும் இயந்திரங்களாக, சுயநலவாதியாக, சுயசார்பு அற்றவர்ளாக மாற்றபட்டுள்ளோம் என்பதையும் கூறினார், மரபுக்கு திரும்புதலே உண்மை பகுத்தறிவு எனவும், இதனை ஏற்காத நவீன சிந்தனையாளர்களும் பகுத்தறிவுவாதிகளும் ஒருவேளை இதனை பிற்போக்குதனம் என கருதும்பட்சத்தில், இந்த நவீனமும், பகுத்தறிவும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் சமூகத்துக்கும் தராத மகிழ்ச்சியை, வாழ்வின் இன்பத்தை அத்தகைய பிற்போக்கு தனம் தருகிறதெனில் அத்தகைய பிற்போக்குவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே என கூறியது! உண்மையாகவே பட்டது நமக்கும்! 

அப்புறம் என்ன? லட்டு, அல்வா, ஜூஸ், தோசை, பக்கோடா, முறுக்கு, பாயாசம், பொங்கல், பிரியாணி என (சிறு தானியங்களில் செய்யபட்டவை) எதையும் விடவில்லை! செம டேஸ்ட்... ஆஆவ்! ஏப்பம் சார்!"

நன்றி: சகோ அஹ்மத் இஸ்மாயில்

Sunday 9 February 2014

இஸ்லாமை பின்பற்றுகின்றேன் - அறிவித்தார் யுவன் சங்கர் ராஜா..


பிரபல இசையமைப்பாளரும், இளையராஜாவின் மகனுமான யுவன் ஷங்கர் ராஜா தான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதாக இன்று அறிவித்துள்ளார். இதுக்குறித்த தகவல்கள் சமூக தளங்களில் சில நாட்களாக சுற்றிக்கொண்டிருந்தாலும், யுவன் இதுக்குறித்து எதுவும் தெரிவிக்காததால் வதந்தி என்றே கருதப்பட்டது. இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஒரு இஸ்லாமிய பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துக்கொண்டார் என்றும் கூட செய்திகள் பரவியது.

இவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக, இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கீழ்காணும் கருத்தை தெரிவித்துள்ளார் யுவன். 

"I'm not married for the third time. That news is fake and yes I follow Islam and I'm proud about it. Alhamdhulillah"
நான் மூன்றாவது முறையாக திருமணம் செய்யவில்லை. அந்த செய்தி பொய்யானது. ஆம், நான் இஸ்லாமை பின்பற்றுகின்றேன், அதுக்குறித்து பெருமையும் படுகின்றேன். புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரிதாவதாக...

மேலும் அவர் கூறுகையில், 

"My family supports my decision and there is no misunderstanding between me and my dad."
என்னுடைய முடிவை என் குடும்பம் ஆதரிக்கின்றது. இது தொடர்பாக என் தந்தைக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை. 


யுவன் சங்கர் ராஜாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இங்கே 

யுவன், உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக...

நன்றி: ஆஷா பர்வீன்
ஆதாரம் சரிபார்த்தல் & கட்டுரை: ஆஷிக் அஹ்மத் அ 

Tuesday 4 February 2014

மோடி - ஹிட்லர்: ஓர் உணர்வுப்பூர்வ ஒப்பீடு..


       டால்ஃப் ஹிட்லர் யூத இனப் படுகொலைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, கற்றறிந்த, நடுத்தர ஜெர்மானியர்கள் செயலற்று அமைதியாக நின்றனர் என்று வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கனத்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். விஷயத்தின் விபரீதத்தை மக்கள் உணராமல் இருந்திருக்கலாம். அல்லது, ஹிட்லரின் பிரசாரத்தை நம்பி, நம் நன்மைக்காகத்தானே இவ்வாறு செய்கிறார் என்று நினைத்திருக்கலாம். அல்லது, ஓர் அரசை எதிர்த்து சாமானியர்கள் நம்மால் என்ன செய்துவிடமுடியும் என்று கையறு நிலையில் அனைத்தையும் சகித்துக்கொண்டு இருந்திருக்கலாம். காரணங்கள் அல்ல, விளைவுகளே இங்கு முக்கியம்.  


யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பது முக்கியம்.  ரகசியமாக அல்ல, எல்லோருக்கும் முன்னால் திட்டமிட்டு வதை முகாம்களை உருவாக்கி, யூதர்களைப் பட்டவர்த்தனமாக அழித்தொழித்தான் ஹிட்லர்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் (ஜூன் 2004) இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு குஜராத் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் உண்மையில் தீவிரவாதிகள் அல்ல; நடைபெற்றது போலி என்கவுன்ட்டர்தான் என்று சிபிஐ தற்போது அறிவித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக குஜராத்தைச் சேர்ந்த ஏழு காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் விமரிசன வட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறார்.

ஹிட்லர் என்னும் ஆளுமை உருவான கதையும் அவர் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறும் The Rise and Fall of Third Reich-ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஹிட்லர் ஏன், எவ்வாறு யூதர்களைத் தேர்ந்தெடுத்தான், எப்படி வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தான், யூத எதிர்ப்பை எப்படி ஒரு சித்தாந்ததமாக வடிவமைத்தான், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி எப்படித் தன் கனவைச் செயல்படுத்தத் தொடங்கினான் என்பது இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிட்லரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிடுவது அல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம்.  மாறாக, ஹிட்லரின் ஜெர்மனியையும் மோடியின் இந்தியாவையும் அருகருகே நிறுத்தி வைத்து ஒப்பிட விரும்புகிறேன்.

யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் வெறுப்பு பிரசாரத்தை ஜெர்மானியர்கள் ஆட்சேபிக்கவில்லை. அதில் பெரிதளவும் உண்மை இருப்பதாக அவர்கள் நினைத்தனர். யூதர்களை ஜெர்மானியர்களாக அவர்களால் ஏற்கமுடியவில்லை. யூதர்களுக்குத் தேச பக்தி இல்லை என்றும் அவர்கள் தனியொரு குழுவாக இருக்கிறார்கள் என்றும் நமக்கு வரவேண்டிய வாய்ப்புகளை தட்டிப் பறித்துக்கொள்கிறார்கள் என்றும் ஜெர்மானியர்கள் நம்பினார்கள். இந்த பெரும்பான்மை நம்பிக்கையின் மீதே ஹிட்லர் தன் வெறுப்பு அரசியலைக் கட்டமைத்துக்கொண்டான். இந்த வெறுப்பு அரசியலைக் கொண்டுதான் அவன் யூதர்களைக் கொல்லத் தொடங்கினான்.


நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் இந்துக்களையே இந்தியர்களாகக் காண்கின்றனர். இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகவே அவர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். மோடி வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பொதுக்கூட்டங்களில் உரையாடியிருக்கிறார். 2002 குஜராத் படுகொலைகளில் மோடிக்குப் பங்கு இருக்கிறது என்பது மட்டுமல்ல, 2002 சம்பவத்தை தனது உந்து பலகையாகப் பயன்படுத்தி மேலேழும்பி வந்தவர் அவர். சந்தேகத்துக்கு இடமின்றி அதிலிருந்து பெரும் ஆதாயமும் அடைந்திருக்கிறார்.

அந்த வகையில், ஹிட்லர், மோடி ஆகிய இருவருடைய எழுச்சியின் அடித்தளத்திலும் வெறுப்பு அரசியல் (அல்லது வெறுப்பு அரசியலும்) காணக்கிடைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. மோடி யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக முன்வைக்கமுடியாது. ஹிட்லரும்தான் யாரையும் நேரடியாகக் கொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஹிட்லரின் கரங்களில் படிந்த அதே ரத்தக் கறை மோடியின் கரங்களிலும் படிந்திருக்கிறது. அந்தக் கரங்களில் கறை அதிகம், இதில் குறைச்சல் என்று வேண்டுமானால் ஒருவர் வாதிடலாம்.

அல்ல, மோடியின் கரங்களில் கறையே இல்லை என்று சிலர் வாதிடும்போது தவிர்க்கயிலாதபடி ஜெர்மானியர்கள் நினைவுக்கு வந்துவிடுகிறார்கள். இப்போது இஷ்ரத் ஜஹான் வழக்கு பற்றிய விவாதங்களிலும்கூட இவர்கள் நரேந்திர மோடியைத் தப்புவிக்கவே ஆர்வமாக இருக்கிறார்கள். ‘இஷ்ரத் ஜஹான் மோதல் கொலை மோடிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லையா? 2002 சம்பவத்தில் மோடி நேரடியாக ஈடுபட்டார் என்று எங்காவது நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறதா? (கரண் தாப்பருடனான முடிவுறாத டிவி பேட்டியின்போதும் மோடியே இதையே கேட்டார்). மோடியின் குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? அந்த ஒரு சம்பவம் (2002) நீங்கலாக மோடி மீது ஏதாவது குற்றம் சுமத்த முடியுமா உங்களால்?’

நம் கண் முன்னால் ஒரு பெரும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதை ஒருவர் தூண்டிவிட்டிருக்கிறார் அல்லது பின்நின்று இயக்கியிருக்கிறார் அல்லது கண்டும் காணாமல் விட்டிருக்கிறார். குறைந்தபட்சம், அதிலிருந்து நேரடி பலன் ஈட்டியிருக்கிறார். இருந்தும் எப்படி அவரை நம்மில் சிலரால் உயர்த்திப் பிடிக்க முடிகிறது? அவரைத் தாங்கி பிடிக்கவேண்டும் என்று எப்படி, ஏன் சிந்திக்கிறோம்? ’குஜராத் மாதிரி வளர்ச்சி’ நம் கண்களைச் கூசச் செய்கிறதா? அழிவை விட்டுவிட்டு வளர்ச்சியை மட்டுமே அன்னப்பறவைப் போல் நாம் உறிஞ்சி எடுத்து மகிழ்கிறோமா? என்றால், இப்படிப்பட்ட cherry picking மதிப்பீடுகளை ஹிட்லருக்கும் கூட நம்மால் அருளமுடியும் அல்லவா?

இந்துத்துவா கொள்கையோடு உடன்படுவதால் மோடியை உயர்த்திப் பிடிப்பவர்களைக்கூட புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கற்றறிந்த, நடுத்தர வர்க்க இந்தியர்களில் ஒரு சாரார் மோடியை அவருடைய ‘குஜராத் மாதிரி வளர்ச்சிக்காக’ 2002-ஐ வசதியாக மறந்துவிட்டு ஆதரிப்பதைப் பார்க்கும்போது அச்சமே ஏற்படுகிறது. 

மோடியை உயர்த்திப் பிடிப்பதன்மூலம் இவர்கள் வெறுப்பு அரசியலையும்கூட சேர்த்தே உயர்த்திப்பிடிக்கிறார்களா? இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய வெறுப்பைத்தான் இவர்கள் மோடி ஆதரவாக முன்வைக்கிறார்களா? மீண்டும் மீண்டும் மோடியை idolize செய்வதன்மூலம் இவர்கள் தெரியப்படுத்தும் செய்தி என்ன? யூதர்களை அடியோடு வெறுத்த பலர் ஹிட்லரை மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அறம் சார்ந்த விழுமியங்களை நாம் மீட்டெடுக்கவேண்டிய தருணமிது. ஹிட்லரின் ஜெர்மனி செய்த தவறை மோடியின் இந்தியா இழைக்கக்கூடாது.  குஜராத் அரசு ஆவணங்கள் சொல்வதைப் போலவே அந்த மாநிலம் வளர்ச்சியடைந்திருந்தாலும்கூட நாம் நரேந்திர மோடியை நோக்கி அறம் சார்ந்த கேள்விகளை எழுப்பியே தீரவேண்டும்.

2002-ஐ நாமும் மறக்கக்கூடாது; மோடி அதனை மறந்துபோகவும் அனுமதிக்கக்கூடாது. மோடியின் செயல்களை நாம் நியாயப்படுத்தி பேசும் ஒவ்வொரு முறையும் நாம் வரலாற்றில் பல அடிகள் பின்னோக்கிச் செல்கிறோம். இப்படி பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து செல்லும்போது ஒரு கட்டத்தில் நாம் ஹிட்லரின் ஜெர்மனியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

அறம் அத்தனை முக்கியமல்ல, வளர்ச்சியைக் காட்டினால் போதும் என்னும் அபாயகரமான செய்தியை அரசியல்வாதிகளுக்கு நாம் வெளிப்படுத்துவது இன்றைய சமூகத்தை மட்டுமல்ல இனிவரும் சமூகங்களையும் சேர்த்து பாதிக்கும். அதற்குத் துணை போன பெருமை மட்டும் நமக்கு எஞ்சி நிற்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நன்றி: மருதன், தமிழ் பேப்பர்