கர்நாடக தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே பிஜேபிக்கு கடும் பின்னடைவை தந்திருக்கின்றன. அதே நேரம், இந்த தோல்விக்கு எதியூரப்பாவே காரணம் என்று பிஜேபி தலைவர்கள் கூறுவதை காண முடிகின்றது. ஆனால் இது உண்மையா? நிச்சயமாக இல்லை. வெகுசில தொகுதிகளை தவிர்த்து, ஏனைய தொகுதிகளில் எதியூரப்பா கட்சி மற்றும் பிஜேபி ஆகிய இரண்டும் பெற்ற வாக்குகளை கூட்டினாலும் கூட முதலிடம் பெற்ற கட்சியை முந்தவில்லை.
ஆதாரம்: தொகுதிவாரியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை தன் தளத்தில் வெளியிட்டுள்ளது தேர்தல்துறை . அதில் மேற்சொன்ன உண்மையை காணலாம் http://eciresults.ap.nic.in/ConstituencywiseS1034.htm. (இந்த சுட்டிக்கு சென்று ஒவ்வொரு தொகுதியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒருவர் காணலாம்)
இன்னும் சொல்ல போனால் பல தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று பிஜேபி அசிங்கப்பட்டுள்ளது. எதியூரப்பா கட்சி இல்லாமலும் கூட காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையை பெற்றிருக்கும். எதியூரப்பா கட்சியாலேயே தாங்கள் தோற்றோம் என்ற பிஜேபியின் பிரச்சாரம் உண்மையை மறைக்கும் கேவலமான வாய் சவடாலே அன்றி வேறொன்றும் இல்லை. ஊழல், நிலஆக்கிரமிப்பு, ஆபாசம், பெங்களூருவின் சுகாதாரமற்ற சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களுக்காக பிஜேபியை கர்நாடக மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டனர் என்பதே உண்மை...
நன்றி: ஆஷிக் அஹமத் அ
| Tweet | ||||



