Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday 27 January 2015

மோடியின் பேஷன் களேபரம் - இத மறந்திராதிங்க


"Ridiculous" - தான் அணிந்திருந்த சூட் முழுக்க தன் பெயரை பதிந்து பவனி வந்த மோடியின் செயலை இப்படியாக வர்ணிக்கின்றது வாஷிங்டன் போஸ்ட். வால்ஸ்ட்ரீட் ஜர்னலோ மேலும் பல படிகள் உயர்ந்து மோடியின் செயலை கடுமையாக பகடி செய்கின்றது. 


மோடியின் இந்த செயல் புதிதும் அல்ல, எகிப்து சர்வாதிகாரி முபாரக் இப்படியான ஆடையை அணிந்துள்ளார். 


ஒரு பிரதமரின் இத்தகைய செயல் இந்தியர்களிடையே கடும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், ஒரு முக்கிய விவகாரத்தை நாம் மறந்திரக்கூடாது.

மன்மோகன் சிங் அரசாங்கம் அணு ஆயுத ஒப்பந்தத்தை கொண்டு வந்த போது, அதனை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் எல்லாம் கொண்டு வந்து களேபரம் செய்த பாஜக, இன்று ஒபாமாவின் வருகையின் போது அத்திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முயன்றுக்கொண்டிருக்கின்றது. மோடியின் பேஷன் செயல்களில் இந்த முக்கிய விவகாரத்தை (மற்றுமொரு U-Turn) நாம் மறந்துவிடக்கூடாது.

மோடியின் அந்த சூட் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது யாருடைய பணம்? நம் வரிப்பணமா? அல்லது யாராவது உதவி செய்தார்களா? மோடி ஆட்சியில், அவர் கூறிய 'நல்ல நேரம்' என்பது பணக்காரர்களுக்கும், அவருடைய ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் மட்டும் தான் போல.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒபாமாவை கவர மோடி/பாஜக அரசாங்கம் இதுவரை இல்லாத அளவு முயற்சிகளை செய்து கொண்டிருக்க, அவரோ சில வார்த்தைகளை உதிர்த்து (மோடியை) அதிர்ச்சியடைய செய்துவிட்டார். 

ஒன்று, இந்தியாவில் நிலவும் வகுப்புவாத அசாதாரண நிலையை சுட்டிக்காட்டியது. 

இரண்டு, சமீபத்திய ஆண்டுகளாக, இந்தியாவில் ஏழைகளின் நிலை ஏற்றம் பெற்று வருவதாக கூறியது. அப்படியானால் அப்போது யார் ஆட்சி?

கட்டுரை: ஆஷிக் அஹமத் அ 
படங்கள்: இந்தியா டுடே மற்றும் சமூக வலைத்தளங்கள் 


1 comments:

Indian said...

Good try. :-)