Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Monday 16 April 2012

முஸ்லிம் பெண் பதிவர்களின் அதிரடி நடவடிக்கை


பல்வேறு சவால்களையும் தாண்டி இஸ்லாம் தொடர்ந்து பலரையும் தன்பால் ஈர்த்து வருகின்றது. இஸ்லாமை ஏற்போரில் பெண்களே அதிகம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்லாம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகின்றது.

தற்போது இதில் ஒரு பகுதியாக, முஸ்லிமல்லாதவர்கள் பயன்பெறும் விதமாக (குறிப்பாக சகோதரிகள்) இஸ்லாமிய பெண்மணி என்ற தளம் (பார்க்க <<இங்கே>>) முஸ்லிம் சகோதரிகளால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளமானது முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பதிவுலக சகோதரிகள் மற்றும் முகப்பக்கத்தில் இஸ்லாம் குறித்து விளக்கம் அளிக்கும் சகோதரிகளால் ஒருங்கிணைத்த முயற்சியாக தொடக்கப்பட்டுள்ள இந்த தளம், இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய அடிப்படையிலான சிந்தனைகள், விழிப்புணர்வு கட்டுரைகள், வரலாற்று பின்னணிகள் போன்றவையும் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்து அறிய விரும்பும் மாற்று கொள்கை சகோதர சகோதரிகளுக்கு இந்த தளம் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றோம்.  முஸ்லிம்கள், இந்த தளம் பயனுள்ளதாக இருந்தால் நீங்கள் அறிந்தவர்களுக்கு கூறி இந்த முயற்சி வெற்றி பெற ஆதரவளியுங்கள் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த முயற்சியை பொருத்திக்கொண்டு, இந்த சகோதரிகள் தங்கள் பணியில் வெற்றிபெற இறைவன் உதவுவானாக...

<<இஸ்லாமிய பெண்மணி தளத்தின் அறிமுக பதிவை இங்கே காணலாம்>>

Wednesday 4 April 2012

தமிழ்மணத்தில் உலாவும் சைக்கோ(க்கள்)


கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் பல்வேறு போலி முகவரிகளை உருவாக்கிக்கொண்டு கண்டப்படி பிளஸ் மைனஸ் என்று போட்டுக்கொண்டு உலாவும் சைக்கோ(க்கள்) குறித்து பெரியவர் வாஞ்சூர் அவர்களின் பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்.

இப்படியாக போலி முகவரிகளை கொண்டு முதன் முதலாக வோட் போட ஆரம்பிக்கப்பட்டது இத்தள பதிவில் இருந்து தான் என்பதால் இது குறித்த சில விசயங்களை கூற கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லிம் பதிவர்களின் தமிழ்மண பெயர்களில் சிறு மாற்றம் செய்து முகவரிகள் உருவாக்கி பல்வேறு பதிவுகளுக்கு தாறுமாறாக வோட் போடப்பட்டது. இது படுகீழ்த்தரமான அணுகுமுறை என்பதை விட முட்டாள்தனமான அணுகுமுறை என்பதே சரியாக இருக்கும். காரணம், ஒரே ஆளே (அல்லது அவரை சார்ந்த சில ஆட்கள்) இப்படியாக செய்கின்றார் என்பது வெகு விரைவாக புரிந்துவிட்டது. பிற்பாடு வேறு பெயர்களில் முகவரிகள் உருவாக்கப்பட்ட போது அதற்கு காரணமும் இவர்களே என்பதும் எளிதாக புலப்பட்டுவிட்டது.

வோட் எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதற்கு ஒரு உதாரணமாக (இதுநாள் வரை உருவாக்கப்பட்டுள்ள போலி முகவரிகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது),

mohaashik (original) - mohaaashik (போலி, ஒரு 'a' அதிகமாக இருப்பதை கவனியுங்கள்)
hyderali (original) - hyderalii (fake)

அதுபோல பொதுவான முஸ்லிம் பெயர்களிலும், அல்லாத பெயர்களிலும் பல முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக இப்படியாக பல முகவரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

சரி, சிலர் மீதுள்ள வெறுப்புணர்வால் இப்படி செயல்படுகின்றார்கள் என்று நினைத்தால், அங்கு தான் தங்களை சைக்கோ(க்கள்) என்று நிரூபித்தார்கள். ரைட்டர் விஜயகுமார் அவர்களின் பதிவில் முஸ்லிம்கள் பெயரில் மைனஸ் வோட் குத்தப்பட்டது. முஸ்லிம்கள் மீது தவறான அபிப்பிராயம் வர வேண்டுமென்பதற்கான சூழ்ச்சியாக இதனை காணாமல் வேறு எப்படியாக இதனை அணுகுவது?

இது சமீபத்திய C.P.செந்தில்குமார் பதிவு வரை தொடர்கின்றது (ஆதாரங்கள் வேண்டுவோர் பின்னூட்டத்தில் மெயில் முகவரி கொடுத்தால் அவை அனுப்பிவைக்கப்படும்)

பதிவர்கள் ரைட்டர் விஜயகுமார், முனைவர் குணா தமிழ் முதலான சகோதரர்களிடம் எங்கள் நிலையை எழுத்து மூலமாகவும், தொலைப்பேசி வாயிலாகவும் தெளிவாக விளக்கிவிட்டோம். தமிழ்மணத்திடமும் சென்ற வாரத்தில் இது குறித்து தெரியப்படுத்திவிட்டோம்.

கடந்த சில நாட்களாக மகுடத்தில் வரும் பதிவுகளில் பெரும்பாலானவை இப்படியாக ஒரே ஆளால் வோட் குத்தப்பட்டு வருபவையே. இதனால் என்ன அங்கீகாரம் பதிவர்களுக்கு கிடைத்து விட போகின்றது? (அல்லது குறைந்து விட போகின்றது) இந்த உண்மைகளை அறியும்போது மனதால் காயப்பட்டு போகமாட்டார்களா? 

பதிவுலகில் பலரும் இந்த வோட் etc குறித்தெல்லாம் கவனம் செலுத்துவதில்லை என்ற போதிலும் ஒரு விளக்கத்திற்காகவாவது சொல்லிவிடுவது நல்லது என்று நினைக்கின்றேன். முஸ்லிம்கள் பெயரில் உங்கள் பதிவிற்கு மைனஸ் குத்தப்பட்டால் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலமாக தெரிவித்து கொள்கின்றோம்.

முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் மீது அநாகரிகமான முறையில் காழ்ப்புணர்வுடன் எழுதப்படும் பதிவுகளுக்கு மட்டும் தான் ஒருகிணைந்து எதிர்ப்பு காட்டி இருந்திருக்கின்றோம். இனியும் அது தொடரும். வேறு எதற்கும் அல்ல...

அந்த சைக்கோ(க்களுக்கு) எளிமையாக ஒரே வரியில் பதில் சொல்ல விரும்புகின்றேன். இஸ்லாம் இல்லையென்றால் எங்கள் வாழ்க்கை ஒன்றுமில்லை. இறைவனை திருப்திபடுத்துவது தான் எங்கள் வேலையே அன்றி, உங்களை திருப்திபடுத்துவது அல்ல. புரிந்துக்கொண்டால் நலம்.

இதுவரையிலான போலி முகவரிகள் (update செய்யப்படும்):
muftaa08, vaanjoorappa@gmail.com, aalimbaava, abdulkader111@gmail.com, bathusha, farooq11, mustaque1515@gmail.com, mustaquee1515@gmail.com, rahman100@gmail.com, kokkaamakkaa@gmail.com, muztafa, haitharjunus, PANNAGAM3@GMAIL.COM, fazul, mohemadrias, ibrahimriyas@gmail.com, kavippuyal007@yahoo.com, hareraama, gulamnabi000@gmail.com, fatimabebehh@gmail.com, NONJOOR, kpeterson, alexm, punter, blara, superman, kattathora, iniyaa, ABDULRASHID, anvarhussain, farooq11, periyarthaasan, purampookuampalathar, kaatharbaai, MUDAMOSIYAAR, sahedmiah, VIRUMANDII, krishram1234@gmail.com, allah, palthakarey, RSSGROUP, narendramodi, moheemadrias, kungoor, sivasena, nayagan_12 etc



carbonffriend, aashiiq_14, AMINAA29, hussainaamma, hajamydheeen, peermohamed.mm@gmail.com, abdulhakkimm, suvanapppiriyan, rabbanii, hyderalii, mohaaashik, PeerMhdd, naasar, askabt.islamm@gmail.com etc
 
நன்றி: சகோதரர் ஆஷிக் அஹ்மத்.