ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் சுமார் 10% வாக்குகளை ஜார்கண்டில் இம்முறை பாஜக இழந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 70 தொகுதிகளில் (வாக்கு சதவித ஒப்பீடு) வென்ற பாஜகவிற்கு இம்முறை தனித்து ஆட்சியமைக்கும் அளவு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.
அது போல, நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீரில் 8% வாக்குகளை பாஜக இழந்துள்ளது. மேலும் காஷ்மீரில் போட்டியிட்ட 34 பாஜக வேட்பாளர்களில் 33 பேர் டெபாசிட் இழந்தனர். ஒருவர் கூட பாஜக சார்பாக காஷ்மீரில் இருந்து தேர்ந்தெடுக்க படவில்லை.
சறுக்கல்களுக்கு எல்லாம் கிரீடமாக mission 44 என்று அதிகப்படியான பிரச்சாரங்களை மேற்கொண்ட மோடிக்கு அவ்இலக்கின் பக்கத்தில் வரும் வாய்ப்பு கூட கிட்டவில்லை. வெள்ள நிவாரணம், இராணுவ வீரர்கள் சந்திப்பு, தேர்தல் பிரச்சாரம் என்று எதுவும் மோடிக்கு பயனளிக்கவில்லை.
இந்த இரு மாநிலங்களில், சுமார் 30 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மோடி கலந்துக்கொண்டுள்ளார். நவம்பர் மாதம் அவர் தன் அலுவலகத்தில் (பிரதமர் அலுவலகம்) இருந்தது 1.5 நாட்கள் மட்டும் தான் என்றால் தேர்தல் பிரச்சார வீரியத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம். அப்படியும் இவர்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.
பாஜக பெரும் வெற்றியை பெறும் என்ற தேர்தல் கணிப்புகளும் பொய்பிக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் சில, ஜார்கண்ட்டில் 60 இடங்கள் வரை பாஜக பெறும் என்று கூறியதை இங்கு நினைவு கூறுவது ஏற்புடையதாக அமையும்.
ஏனோ, இந்த முடிவுகளால், பாஜக மட்டுமல்ல சில ஊடகங்களும் துவண்டு தான் போயிள்ளன.
Tweet | ||||
3 comments:
Oho avana neee....
A clear review. Excellent.
sarukkiyathu muslims katchithan
Post a Comment