Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Saturday 30 January 2016

விசித்திரமான அநாதை இல்லங்கள்...


சில மாதங்களுக்கு முன் என் சொந்தம் ஒருவருக்காக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்து பராமரிக்கும் இல்லம் ஒன்றை விசாரிக்கச் சென்றேன்.

சென்னை போரூர் அருகே இருக்கும் பரணிபுத்தூரில் உள்ளது அந்த இல்லம். நண்பரின் அக்காளை அங்கு சேர்ப்பது தொடர்பாக விசாரிக்கச் சென்றேன்.

மாலை மங்கி இரவு கவ்வும் நேரம் அது. ஒரு பெரிய காம்பவுன்ட் சுவற்றின் பின்புறம் அந்த இல்லம் இருந்தது. உள்ளே முழுக்க முழுக்க பெண்களின் நடமாட்டம். பெரும்பாலும் மனநலம் குன்றியவர்கள் என்பது எளிதில் புரிந்தது.

கேட் மூடி இருந்தது. நிர்வாகி போல் தெரிந்த ஒருவரைக் கண்டேன். சுவற்றிற்க்கு இந்த புறம் இருந்தே ஒரு நபரை சேர்ப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றேன். அவர் அங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு வேறு ஒரு நிர்வாகியிடம் சொன்னார். அவரும் பெண் தான்.

அந்த அநாதை இல்லத்தின் சட்ட திட்டங்கள் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

1. அதாவது, அங்கு யாரையும் சேர்க்க வேண்டும் என்றால் சேர்த்ததுடன் சென்று விட வேண்டுமாம். அதன் பின் அவர்களுடன் எந்த தொடர்பும் இருக்கக் கூடாதாம்.

2. எந்த கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை. அனைத்தும் இலவசம்.

3. போலீஸிடம் நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் வாங்கி வந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

4. இறந்தால் கூட தகவல் தர மாட்டார்களாம். அவர்களே புதைத்தோ, எரித்தோ விடுவார்களாம்.

நான் அப்டியே ஸ்டன் ஆகிட்டேன். இந்த சட்டதிட்டங்கள் என்னை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒருபுறம் என்றால், இன்னொரு விஷயம் என்னை அதைவிட அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அது...

அங்கு எண்ணற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தார்கள். அப்படி என்றால் அவர்கள் பற்றி கவலைப்பட ஒருவர் கூட இல்லை என்று தானே பொருள்?

இந்த உலகம் பெரியது. ஒருவருக்கொருவர் உற்ற துணை. யாரும் தனி இல்லை என்று சொல்பவர்கள் ஒரே ஒரு முறை அங்கு சென்று வந்தால் கதறி அழுது தன் கருத்தை மாற்றிக் கொள்வார்கள்.

எனக்கும் பேரிடி இறங்கியது.

அந்த நேரம் என் மனைவியுடன் போனில் பேசி என் அதிர்ச்சியை பகிர்ந்து கொண்டேன். இல்லாவிட்டால் நிச்சயம் நானும் கதறி அழுதிருப்பேன்.

இது குறித்து நான் என் சொந்தத்திடம் சொல்லவே இல்லை. சொல்லவும் தோணவில்லை.

குறிப்பு: நம்மை எல்லாம் இறைவன் எவ்ளோ நல்லா வச்சிருக்கான் தெரியுமா?

தயவுசெய்து அது இல்லையே, இது இல்லையேன்னு வருத்தப்படாதிங்க. அங்கே பலர் யாருமே இல்லாம இருக்காங்க. நமக்கு கேவலம் பொருட்கள் தான் இல்லை.

கட்டுரை: சிராஜுதீன்

3 comments:

Sampath said...

படித்தவுடன் கண் கலங்கி விட்டேன்.

KILLERGEE Devakottai said...

வேதனையான விடயம் உண்மையிலேயே நாம் அதிஷ்டசாலிகள்தான் இதை பலரும் உணருவதில்லை முடிவில் அருமையாக சொன்னீர்கள்.
தமிழ் மணம் 8

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கொஞ்ச நஞ்சம் இருக்கும் பந்தத்தையும் இந்த இல்லங்களின் விதிமுறைகள் அழித்துவிடும் போல் இருக்கிறதே. அனைத்தும் இலவச சேவை என்பதை வரவேற்புக்குரியது என்றாலும் யாரும் வந்து பார்க்கக் கூடாது என்பது ஐயத்தை உண்டாக்குகிறது.