Pages

Subscribe:

Ads 468x60px

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மத்துல்லாஹி...)..உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

Tuesday 24 January 2012

நாத்திகர்கள் vs ஆத்திகர்கள்.....சில விளக்கங்கள்



மதம் என்பதே மனிதனுக்கு தேவையில்லை. கடவுளை மறுத்தால் இம்மண்ணில் சொர்க்கத்தை படைக்கலாம் என்று சொல்லிவருகிறார்கள் நாத்திகர்கள். அவர்கள் இந்த மண்ணில் சொர்க்கத்தை படைக்கலாம் என்று சொல்வதன் அர்த்தம் அவர்கள் சொர்க்கமாக நினைக்கும் மது, மாது போன்றவற்றை தடையின்றி அணுகலாம் என்பதால்தான். மதத்தில் இருந்தால் இதையெல்லாம் தொட தடையிருக்கிறதே?

எப்படியும் வாழலாம் என்றிருப்பவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று பக்குவப்படுத்துவதே மதங்களின் குறிக்கோள் நோக்கம் எல்லாம்.
யாருமே நம்மை பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்றால் நம்மிடம் தவறுகள் மேலோங்கிவிடும். ஆனால், நம்மை கண்கானிக்க ஒருவன் இருக்கிறான் என்றால்....

உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் நாம் வேலை செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நம் தலைக்கு மேல் ஒரு கேமராவை பொருத்தி நாம் ஒழுங்காக வேலை செய்கிறேனா என்று நம் முதலாளி என்னை கண்காணித்துக்கொண்டிருக்கிறார். அப்போது நமக்கு என்ன தோன்றும்?
நம்மை முதலாளி பார்த்துகொண்டே இருக்கிறார். நாம் எதாவது தவறுசெய்தால் தொலைந்தோம் என்ற எண்ணத்தில் நம்மிடம் ஒரு ஒழுங்கு இருக்கும்.

ஆனால், எந்த்க்கேமராவும் தலைக்கு மேலில்லை. கண்கானிக்க யாரும் இல்லை என்றால் நாம் ஒழுங்காகவா வேலை பார்ப்ப்போம்?. நம்மை பார்க்க ஆளில்லை என்ற எண்ணத்தில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? அதுபோல் தான் கடவுள் நம்பிக்கையும்....

நாம் செய்பவற்றை கடவுள் கண்கானித்துக்கொண்டிருக்கிறார். நாம் ஏதேனும் தவறிழைத்தால் கடவுளிடம் மாட்டிக்கொள்வோம் என்ற நினைப்பில் ஒருவன் இருந்தால் அவன் விபச்ச்சாரம், திருட்டு, குடி, போன்ற அனாச்சாரங்களிலிருந்து ஒதுங்கியே வாழ்வான். மேற்கண்ட தவறுகளை ஒருவன் செய்யாமலிருந்தால் அவனுக்குத்தானே நன்மை.

அதைப்போல, கடவுள் என்ற ஒரு சக்தி இல்லை என்ற நினைப்பிலிருப்பவன் மேற்கண்ட செயல்களை எவ்வித தடையுமின்றி செய்வான். அதனால் அவனுக்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் தீமையே....

இன்னும் ஒரு உதாரணம்....
ஒருவன் உள்ளூரில் இருக்கும்போது மதுவின் பக்கம் நெருங்கவே மாட்டான். அதே...அவன் வெளியூர் சென்றானென்றால் மது, மாது என்று தலைகீழாக இருப்பான். அவன் ஏன் அப்படி உள்ளூரில் ஒரு மாதிரியும், வெளியூரில் ஒரு மாதிரியும் இரட்டைவேடம் போடுகிறான் என்று பார்த்தால்....அவன் உள்ளூரில் மது அருந்திவிட்டு அவன் வீட்டிற்கு சென்றால் தாய், தந்தை, மனைவி என்று யாரிடமாவது மாட்டிக்கொள்வான். அதே வெளியூரென்றால், தன்னை கண்கானிக்க தாய், தந்தை, மனைவி என்று யாருமே இல்லை என்ற அசட்டு துணிச்சலில் மது, மாது மீது நாட்டம் கொள்கிறான். கடவுள் பக்தி இருப்பவன் உள்ளூரில் இருப்பவன் போன்றவன் எதையும் செய்ய பயப்படுவான்.
கடவுள் பக்தி இல்லாதவன் வெளியூர் செல்பவன் போல....அவன் யாருக்கும் பயப்பட தேவையில்லை.

ஒரு மனிதனை கட்டுப்பாட்டுடன் வாழவைப்பதில் கடவுள் பக்தி பெரும்பங்கு வகிக்கிறது. கடவுள் பக்தியுடனும், கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் வாழ்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....அவன் மதவாதியாகவே இருந்துவிட்டு போகட்டுமே அதனால் நாத்திகர்களுக்கு என்ன பிரச்சினை?.

டிஸ்கி:  மற்றவர்களின் நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று பழித்துவிட்டு, தன் நண்பனுக்கு அதே (மூட) நம்பிக்கையின் அடிப்படையில் திருமணம் செய்துவைத்த போலி நத்திகர்களை போல ஆத்திகர்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு.





64 comments:

மனிதாபிமானி said...

கருத்தை சொல்லி என்னை வளர்க்கவும்

Robin said...

Good Post!

VANJOOR said...

மலைகளையே உடைக்கும் சிற்றுளி போன்று உள்ளது இந்த பதிவு.

சிராஜ் said...

வித்தியாசமான கோணத்தில் அணுகி உள்ளீர்கள்.. வாழ்த்துக்கள். நாத்திகத்திற்கு ஆப்பு அடிக்கும் நிறைய logical கேள்விகள் இருக்கின்றன. அவற்றை கேட்டால் மட்டும் என்ன அவர்கள் திருந்திவிடவா போகிறார்கள்???

துரைடேனியல் said...

Arumai.

TM 8.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.மனிதாபிமானி,

சரியான நேரத்தில், உயர்ந்த நந்நோக்கோடு, தெளிவான பொதுநல சிந்தனையுடன், அருமையான கருத்துக்களைக் கோர்த்து எழுதப்பட்ட இன்றைய இன்னொரு மிகச்சிறப்பான பதிவு..!

//கருத்தை சொல்லி என்னை வளர்க்கவும்//---உங்கள் பதிவில் உள்ள கருத்தைவிடவா நான் சிறப்பாக சொல்லி விட போகிறேன்..?!

வாழ்த்துகளுடன் மிக்க நன்றி சகோ..!

Unknown said...

Good post bro!
Thodaratum ungal pani!
Keep it up bro!

சார்வாகன் said...

நல்ல பதிவு,
உலக முழுதும் மத சார்பின்மை, ஜன‌நாயக முறைக்கு எதிரான எதையும் யார் சொன்னதாக் சொன்னாலும் எதிர்ப்பதை நாம் கடமையாக கொண்டவர்கள்.
அந்த வகையில் இப்பதிவு மத சார்பற்றதாக இருக்கிறது, ஜனநாயகத்தையும் எதிர்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக‌ள்.

சில தகவல் மட்டும் அளித்தால் போதும்.

1./அதைப்போல, கடவுள் என்ற ஒரு சக்தி இல்லை என்ற நினைப்பிலிருப்பவன் மேற்கண்ட செயல்களை[மது, மாது] எவ்வித தடையுமின்றி செய்வான்/
குடிப்பவர்களில் எத்தனை பேர் நாத்திகர் ,ஆத்திகர்,புள்ளி விவரம் தர முடியுமா?
சாமிக்கே சாராய‌ம் படைத்து கும்பிடுபவர்கள் இருக்கிறார்கள்.தெரியுமா? அவ‌ர்க‌ள் ஆத்திக‌ரா ,நாத்திக‌ரா?

விபசாரம் என்பது சமூகம்,பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை.இதிலும் ஆத்திகர் ,நாத்திகர் புள்ளி விவரம் அளித்தால் நலம்.
நித்யானந்தாவும் ஆத்திகர்தான்!!!!!!!!!!!!!!!
விப‌சார‌த்தை த‌விர்க்க‌ முடியாது என்று வேறு வ‌ழிக‌ள் த‌ரும் ம‌த‌ங்கள்,பிரிவுகள் உண்டு.தெரியாது என்றால் விள்க்கலாம்.
http://www.jesusinvites.com/content/content.aspx?i=JX5RCssrn38=
இத்தளம் கிறித்தவம்& பாதிரிகள் பற்றிய பாலியல் செய்திகள் கிளுகிளுப்பாக வழங்கும் ஒரு விவகாரமான மதவாதியின் தளம்.இப்படி நடக்கிறது என்றால் நீங்கள் கூறியது தவறா? ஏன் நாத்திகர்கள் பற்றி இவ்வளவு பாலியல் இத்தளத்தில் விவரம் இல்லை?
இல்லையெனில் விள்க்குங்கள்.

2.//பெயர் மதவாதி என்றால்.....அவன் மதவாதியாகவே இருந்துவிட்டு போகட்டுமே.//
மத வாதி என்ற சொல்லை பலர் ஏற்பது இல்லை.அவர்கள் விரும்பும் சொல் மார்க்கவாதி.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அசத்தல் பிரதர்....

Mohamed Faaique said...

அருமையானதொரு பதிவு நன்பரே!!!

G u l a m said...

உங்கள் மீதும் சாந்தி ஏற்படட்டும்!

நல்ல கருத்து !

இதற்கு மேல் நான் இங்கே சொன்னால் மத சாயம் என் மீது பூசப்படும்!

தொடருங்கள்
வாழ்த்துகள்!

இறை நாடினால் இனியும் தொடர்கிறேன்.

வருண் said...

***ஒரு மனிதனை கட்டுப்பாட்டுடன் வாழவைப்பதில் கடவுள் பக்தி பெரும்பங்கு வகிக்கிறது. கடவுள் பக்தியுடனும், கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் வாழ்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....அவன் மதவாதியாகவே இருந்துவிட்டு போகட்டுமே அதனால் நாத்திகர்களுக்கு என்ன பிரச்சினை?. ***

யாரு/எந்த நாத்திகன் இதெல்லாம் எங்களுக்கு பிரச்சினைனு வந்து உங்ககிட்ட ஒப்பாரி வச்சான்?? மதம் கட்டுப்பாட்டுக்கு, மனிதனை பண்படுத்தனு உருவாக்கப்பட்டதுதான். கேக்க நல்லாத்தான் இருக்கு.

ஆனா, நீங்க அரைக்கிணறுதானே தாண்டுறீங்க??

* கடவுளை வணங்கும், மத நம்பிக்கை உள்ளவங்க மிருகமாகவும் இருக்காகங்க அது ஏன்?

* கடவுளை நம்புபவந்தான் உலகில் 95% கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம் எல்லாம் பண்ணுறான், அது ஏன்?

கடவுளும், மதமும் இவர்களை பண்படுத்துதா/ இல்லை பாழ்படுத்துதா?

இதுதான் நாத்திகம் பிரச்சினை!

பதிவுலகில் கடவுள் நம்பிக்கை உள்ளவன் இன்னொருவர் ஃபோட்டொவைத் திருடி (அதெல்லாம் ஜோக் இல்லை) அதை தன் ப்ரஃபைல்ல போட்டுக்கிறான். அதை தப்புனு சொல்ல கடவுள் சிஷ்யர்கள் எவனுக்கும் வக்கில்லை! பெரிய கடவுளை வணங்குறாங்களாம் உலகை நல்வழிப்படுத்துறாங்களாம்!!!

இதுபோல் செய்யப்படும் காமெடிகள்தான் நாத்திகர்களுக்கு பிரச்சினை!

மஸ்தூக்கா said...

அட சார்வாகனே சொல்லிவிட்டார் 'இது நலல் பதிவு' பிறகென்ன இது நல்ல பதிவு தான்
//குடிப்பவர்களில் எத்தனை பேர் நாத்திகர் ,ஆத்திகர்,புள்ளி விவரம் தர முடியுமா?//
குறைந்த விழுக்காடு இருப்பவர்களில் குற்றவாளிகள் எண்ணிக்கையும் குறைவாகத்தானிருக்கும்

Unknown said...

முத்து வரிகள்.

சிராஜ் said...

ஐயா வருணு,

ப்ரோபைல்ல போட்டோ வக்கிரதேல்லாம் ஒரு மேட்டருன்னு போற இடமெல்லாம் சொல்லிக்கிட்டு. வச்சவன போய் கேளு ராசா. இதெல்லாம் ஒரு பிரச்சனையா??? நீங்க வேணும்னா நம்ம போட்டோவ போட்டுகங்க.

சிராஜ் said...

நல்ல போட்டோவா தர்றேன்

Digitally yours.....

வருண் said...

***சிராஜ்Jan 24, 2012 12:21 PM

ஐயா வருணு,

ப்ரோபைல்ல போட்டோ வக்கிரதேல்லாம் ஒரு மேட்டருன்னு போற இடமெல்லாம் சொல்லிக்கிட்டு. வச்சவன போய் கேளு ராசா. இதெல்லாம் ஒரு பிரச்சனையா??? நீங்க வேணும்னா நம்ம போட்டோவ போட்டுகங்க.

Reply
சிராஜ்Jan 24, 2012 12:23 PM

நல்ல போட்டோவா தர்றேன்***

உங்க கடவுள் இதெல்லாம் செஞ்சா தப்பு இல்லை, இதை வச்சு காமெடி பண்ணுங்கனு சொல்லிக்கொடுத்து இருக்காரா?

இல்லை உங்க மதம் சொல்லிக்கொடுத்ததா?

ஏதோ பெரிய யோக்கியன் மாதிரி பேசுறீங்க? இதுபோல் தப்புக்களை தப்புனு தெரியாமல் என்னத்தை மதநூல் படிச்சு கிழிச்சீங்க?

Siraj: This is NOT a JOKE! If you think it is, then your God, and your religion and your "great book" are worthless. They dont teach you what is right and what is wrong. It is a shame!

THE UFO said...

சூப்பர் பதிவு தல.
பதிவை விட டிஸ்கி இன்னும் சூப்பரு.

கடவுள் இதை செய், அதை செய்யாதே, அப்டீன்னு சொல்றார். சொல்றாரா?
அச்சச்சோ, கடவுள் சொல்லிட்டார்பா. அப்டியே கட்டுப்பட்டேன்பா என்கிறான் ஒர்த்தன். இவண் யாரு? ஆத்திகன்.

'நீ என்னடா சொல்றது, நான் என்னடா கேக்குறது'ன்னு 'நான் செய்வேண்டா' அப்டீன்னு தடுக்கப்ப்ட்டதை செய்றான். அவன் யாரு? சொல்லுமா. அவன் யாரு? அவன்தான் நாத்திகன்.

அப்பாவி மக்களை சொல்லாதேன்னு கடவுள் சொல்றார். அருவா, கத்தி எல்லாம் போயி இப்போ ராணுவத்து ஆர் டி எக்ஸ் ஐ கூட்டாளி கர்னல் மார் மூலமா களவாண்டு குண்டு வெச்சி அப்பாவி பொதுமக்களை இவண் கொல்றான். இவன் யாரு? நாத்திகன். ஆனாலும், ஜெய் ஸ்ரீராம் னு சொல்வான். அது நடிப்பு. சும்மா.

விபச்சாரம் செய்யாதே, வட்டி வாங்காதே, குடிக்காதே, கொலை செய்யாதே, திருடாதே அப்டீன்னு சொல்றார் கடவுள். நீ என்னாப்பு சொல்றதுன்னு, ஒருத்தன் அதெல்லாம் செய்றான். அவன் யாரு? நாத்திகன். அல்லாஹு அக்பர்னு சொல்வான். அது நடிப்பு. சும்மா.

கொள்ளை அடிக்காதே, ஒரு கன்னத்தில் அடிச்சா மறு கன்னத்தை காட்டு ன்னு கடவுள் சொல்றார். அதை கேட்காமல், நீ போயா லூசுன்னு இவண், அவனை அடிச்சவனுடைய நாட்டையே அழிக்கிரான். அடுத்தவனை அடிமைப்படுத்தி அவன் நாட்டு பொருளாதாரத்தையே பேடன்ட் போட்டு சுரண்டுறான். இவண் யாரு? நாத்திகன். ஓ ஜீசஸ் ஐ லவ் யூ ன்னு சொல்வான். அது நடிப்பு. சும்மா.

இப்போ சொல்லுங்க... நூத்துக்கு 99.9999999999999% இந்த உலகத்துல கேடு கெட்டவன் ஆரு? வேற யாரு? நாத்திகன் தான்.

ஒருவன் கெட்ட செயல் செய்யும்போதுதான் அவன் நாத்திகன் என்றே உலகத்துக்கு தெரிய வருது. அவன் இது நாள் வரை ஆத்திகன் வேஷத்துல இருந்து இருக்கான்னும் புரியுது. கர்னல் புரோகித், சாத்வி, அசிமானந்தா, அஜ்மல் கசாப், ஒசாமா பின் லேடன், அப்பன் ஜார்ஜ் புஷ், மகன் புஷ் மாதிரி.

ஆத்திகன்- கெட்டவனா மாற வாய்ப்பு இருக்கு. நாத்திகன்- நல்லவனா மாற வாய்ப்பு கம்மி. மனசாட்சிக்கு பயந்தாதான் உண்டு. அவரவர் மனசாட்சி பத்தி அவரவருக்கு நல்லாதான் தெரியுமே.

THE UFO said...

திருடன் திருடுவான். எல்லா திருடனும் திருடுவான்.
போலிஸ் திருடுரவனை புடிப்பான். ஆனா எல்லாரும் அப்டின்னு சொல்ல முடியாது.

சில போலீஸ், 'பொய் கேசு போடுவேன்'னு மிரட்டி நம்ம கைக்காசை மாமூல் வாங்கிட்டு நம்ம பாக்கட்டை போண்டி ஆக்கிட்டு போறானா இல்லையா?

இவண் போலிசா? திருடனா? காக்கி யூனிபார்ம் போட்ட திருடன்னு சொல்வீங்களா மாட்டீங்களா? ஆனாலும், ஒருத்தன் திருடனா இருந்தா திருட அதிக வாய்ப்பு இருக்கு.

போலிசா இருந்தா வாய்ப்பு கம்மி. பப்ளிக்கா திருட முடியாது. நைசாத்தான் பண்ண முடியும். கூட யாரும் இல்லைன்னா திருடலாம். தெரிஞ்சவங்க கிட்டே மாமூல் கேட்க முடியாது. உயர் அதிகாரி இருந்தா முடியாது. தனி அறையிலே அல்லது ஒதுக்கு புறமா கூட்டி போய் வசூளிக்கணும். கேமரா மொபைல் வந்ததால இப்போ பப்ளிக்கா மாமூல் கேக்குறது குறைஞ்சு இருக்கு.

இதெல்லாம், இந்த கட்டுப்பாடு தடைகள் எல்லாம் திருடனுக்கு இருக்கா?

இப்போ சொல்லுங்க,
நிஜமான நாத்திகனா?
பொய்யான ஆத்திகனா?
எவன் ரொம்ப மோசம்?
(பதில் அப்புறம். அதுக்கு முன்னாடி, ரெண்டு பெரும் நாத்திகன் தானே)

சிராஜ் said...

சகோ வருண்,

/* கடவுளும், மதமும் இவர்களை பண்படுத்துதா/ இல்லை பாழ்படுத்துதா?

இதுதான் நாத்திகம் பிரச்சினை! */

நாத்திகம் உங்கள பண்படுத்தி இருக்கா??? ஹி..ஹி..ஹி..

நேற்று செங்கோடியோட தலத்தில ஒரு கமென்ட், நம்ம "திருமண" புகழ் நாத்திக வால் பையன் முதல் கமெண்ட் எப்படி போட்டாரு தெரியுமா?
"மதவாதிகளால் இனி ஒரு மயிரையும் புடுங்க முடியாது".

இது தான் பண்பாடா???

பண்பாடுனா என்னனு தெரியுமா??? நம்ம எதிர்க்குரல் ஆசிக், பின்னூட்டவாதி ஆசிக், குலாம், ஹைதர் அலி, சுவனப்பிரியன்னு இஸ்லாமிய பதிவர்கள் இருக்கிறார்களே அவர்களுடைய தளங்களில் சென்று பாருங்கள். ஒரு வார்த்தை கூட உங்கள் குழு நண்பர் போல் எழுதி இருக்க மாட்டார்கள். எந்த பதிவிலும் இருக்காது. இது பண்பாடு. இந்த பண்பாட்ட யார் கத்துகொடுத்தா????
ஆமா...ஆமா.. அதே தான். இஸ்லாம் தான்.

சிராஜ் said...

/*
திருடன் திருடுவான். எல்லா திருடனும் திருடுவான்.
போலிஸ் திருடுரவனை புடிப்பான். ஆனா எல்லாரும் அப்டின்னு சொல்ல முடியாது.

சில போலீஸ், 'பொய் கேசு போடுவேன்'னு மிரட்டி நம்ம கைக்காசை மாமூல் வாங்கிட்டு நம்ம பாக்கட்டை போண்டி ஆக்கிட்டு போறானா இல்லையா?

இவண் போலிசா? திருடனா? காக்கி யூனிபார்ம் போட்ட திருடன்னு சொல்வீங்களா மாட்டீங்களா? ஆனாலும், ஒருத்தன் திருடனா இருந்தா திருட அதிக வாய்ப்பு இருக்கு.

போலிசா இருந்தா வாய்ப்பு கம்மி. பப்ளிக்கா திருட முடியாது. நைசாத்தான் பண்ண முடியும். கூட யாரும் இல்லைன்னா திருடலாம். தெரிஞ்சவங்க கிட்டே மாமூல் கேட்க முடியாது. உயர் அதிகாரி இருந்தா முடியாது. தனி அறையிலே அல்லது ஒதுக்கு புறமா கூட்டி போய் வசூளிக்கணும். கேமரா மொபைல் வந்ததால இப்போ பப்ளிக்கா மாமூல் கேக்குறது குறைஞ்சு இருக்கு.

இதெல்லாம், இந்த கட்டுப்பாடு தடைகள் எல்லாம் திருடனுக்கு இருக்கா?

இப்போ சொல்லுங்க,
நிஜமான நாத்திகனா?
பொய்யான ஆத்திகனா?
எவன் ரொம்ப மோசம்?
(பதில் அப்புறம். அதுக்கு முன்னாடி, ரெண்டு பெரும் நாத்திகன் தானே)*/

தல, நீங்க யார திட்ரீங்கன்னு நிச்சயமா எனக்கு புரியல. ஆனா இத படிச்சவுடன எனக்கு தல சுத்துது. சோ சொந்தக்காரரா நீங்க????

ஏற்கனவே எல்லாம் கொழம்பி போய் சுத்திகிட்டு இருக்கோம், யாருக்கு என்ன கம்மென்ட் போட்டோம்னு தெரியாம. நீங்க வேற...

சிராஜ் said...

சகோ வருண்,

/* உங்க கடவுள் இதெல்லாம் செஞ்சா தப்பு இல்லை, இதை வச்சு காமெடி பண்ணுங்கனு சொல்லிக்கொடுத்து இருக்காரா?

இல்லை உங்க மதம் சொல்லிக்கொடுத்ததா?

ஏதோ பெரிய யோக்கியன் மாதிரி பேசுறீங்க? இதுபோல் தப்புக்களை தப்புனு தெரியாமல் என்னத்தை மதநூல் படிச்சு கிழிச்சீங்க? */

இப்படி எல்லாம் எங்க கடவுள் சொல்லி தரலையே???? சொல்லி தந்தா நிச்சயம் அந்த கடவுள சந்தேகக் கண் கொண்டு பார்த்திருப்போம்.

அப்படி இல்லாததால் தான் அவரை முழுமையாக நம்புகிறோம்.

மேலும், இதை யார் செய்தார் என்று எனக்கு தெரியாது. நான் இல்லை, அது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரியும். மேலும், இது ஒரு பெரிய தவறாக என் மனதிற்கு இப்பொழுதும் பட வில்லை. உண்மையில் அந்த படங்களை பார்த்தவுடன் நானும் சிறிது கொழம்பி விட்டேன், வால் பையன் தான் வேறொரு பேரில் பதிளிடுகிராரோ என்று.

சிராஜ் said...

சகோ வருண்,

/* Siraj: This is NOT a JOKE! If you think it is, then your God, and your religion and your "great book" are worthless. They dont teach you what is right and what is wrong. It is a shame! */

நான் சில நாட்களாக பின்னூட்டங்கள் வாயிலாகவும், எதிர்பதிவுகள் மூலமும் சிலருடன் சண்டையிட்டதை நீங்கள் அறிவீர்கள்.

ஆனால் திரைமறைவில், அவ்வாறு செய்யவேண்டாம் என்று நிறைய நண்பர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்கள் அறியாமல் செய்கிறார்கள், அவர்களிடம் அழகிய முறையில் மட்டுமே விவாதியுங்கள், இல்லாவிட்டால் விவாதிக்க வேண்டாம். அதையும் மீறி விதாண்டவாதம் செய்தால், அறிந்துகொள்ளுங்கள் நீங்களும் இஸ்லாத்திற்கு விரோதமாகத்தான் நடக்கிறீர்கள் என்று சொன்னார்கள். யார் தெரியுமா??? சாட்சாத் SO CALLED இஸ்லாமிய பதிவர்கள் தான்.

இது தான் சகோ உண்மையான பண்பாடு. அதனால் தான் எனது வேகத்தை நான் கொஞ்சம் குறைத்துக் கொண்டேன். இன்னும் குறைப்பேன், அழகிய முறையில் இனி விவாதிப்போம்.

வருண் said...

நாத்திகனுக்கு எல்லா மதமும் ஒண்ணுதான். கடவுள் நம்பிக்கையே இல்லை, இதில் எந்த மதம்னா என்ன? நீங்கதான் நாத்திகனுக்கும் மதச்சாயம் பூசுறீங்க!

உங்க கடவுள், உனக்க மதம், உங்க "நூல்" எல்லாம் உங்களை நல்வழிப்படுத்தினால் சந்தோஷம்தான், அதைப் புரிந்துகொள்ளுங்கள்!

மற்றபடி மத அடிப்படையில் நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை.

கடைசியா, உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் தடிப்பது, தவறான வார்த்தைகள் பயன்படுத்துறதெல்லாம் எல்லா விவாதக்களத்திலும் நடப்பது. அதை வைத்து ஒருவர் தரம், தராதரம் நான் பார்ப்பதில்லை! இதெல்லாம் விவாதக்களங்களில் பலவருடங்கள் இருப்பவர்களுக்கு விளங்கும். You should not take such things personally!

Take care, bye folks!

BTW, remove the word verification guys. it is a REAL NUISANCE!

சிராஜ் said...

வருண்,

நீங்கள் கேட்டதால், நானும் அதே கேள்வியை கேட்கிறேன்.
நேற்று செங்கொடி தளத்திற்கு வந்து நீங்கள் கீழ்கண்ட கமெண்ட் போட்டீர்கள்
/* இஸ்லாத்திற்கு நெத்தியடி சார் தொடருங்கள்.. */
ஆனால் வால் பையன் "ம..." என்று கொச்சையாக பேசியதை நீங்கள் கண்டிக்க வில்லையே??? ஏன் சார்??????

வருண் said...

Honestly, I did not see that post at all. I dont read all posts. BTW, I am not perfect. I write worse than vaalpayyan in discussions and heated-arguments bcos I use the same id for complimenting and criticizing and for using abusive words. I dont like to behave decent in one id and using another id for abuse. Dont misunderstand! I am not saying any of you guys are doing it. I am just saying what I am.

நீங்க நாத்திகரை பத்தி கண்டமேணிக்கு திட்டினாலும் நான் பாதிக்கப் படப்போவதில்லை. எல்லா நாத்திகனும் யோக்கியனும் இல்லை! நாத்திகனோ, ஆத்திகனோ நல்லவனா இருந்தால் போது சார்! :)

Xyz said...

ஐயா வருண்,

என்ன இன்னும் மறக்காம இங்க வந்தும் என்னப்பத்தி கம்ளைன் பன்னி ஒப்பாரி வைக்கிறிங்க..ஹி ஹி..

உங்கள மாதிரி ஆட்கள என்ன அயோக்கியன் என்று சொன்னாலும் நான் கவலைப்படப்போவதில்லை நான் அயோக்கியனாகவே இருந்துவிட்டுப்போகிறேன்..

இதுதான் உங்கள் மதநூல் கற்றுத்தந்ததா கடவுல் கற்றுத்தந்தாரே என்று இதற்கு சம்பந்தமில்லாதவர்களுடன் சண்டை போடுவதை நிறுத்துங்கள் வருண். நான் இஸ்லாமியன் என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டா வால்பையன் போட்டோவை திருடினேன்..

நீங்கள் கேட்பதையே என்னாளும் திரும்பிக்கேட்க முடியும்.. இன்னொருவன் உணர்வுகள் புன்படும்படியாக நடப்பதுதான் நாத்திகம் கற்றுத்தந்ததா..? ஆனால் நான் அப்பிடி கேட்கமாட்டேன்.. ஏன்னா நீங்களே சொல்றிங்க,, //எல்லா நாத்திகனும் யோக்கியனும் இல்லை! நாத்திகனோ, ஆத்திகனோ நல்லவனா இருந்தால் போது சார்!//

இதேயேதான் இங்குள்ள பலர் வருடக்கணக்காக சொல்லி வருகிறார்கள்.. எவனாவது ஒரு அயோக்கிய ஆத்திகன் செய்யும் வேலையை ஒட்டுமொத்த மக்கள் செய்வதாக எண்ணாதீர்கள் என்று.. அந்த அயோக்கியன் மதத்தின் பெயரிலோ மதம்தான் இப்படி சொன்னது என்றாலும் கூட!

Xyz said...
This comment has been removed by the author.
Xyz said...
This comment has been removed by the author.
Xyz said...
This comment has been removed by the author.
Xyz said...

Hello Blog Owner..

Go- Settings- Comment Settings - "NO" word verification..

சார்வாகன் said...

வணக்கம் மனிதாபிமானி சகோ,
புள்ளி விவரம் இல்லைஎன்றால் கூட இந்த கருத்தை நீங்கள் இந்த சூழலில் கூற இயலும்.
அதாவது உண்மையான ஆத்திகன் இப்படி எல்லாம் செய்ய மட்டான்,போலி ஆத்திகர்களும் ,பெரும்பான்மையான இறை மறுப்பாளர்களும் செய்கிறார்கள் என்றால் மறுக்க முடியாது.
எந்த உடல் நலம் பாதிக்கும் செயல்களை செய்யாதவர்கள் நான் அறிந்த நாத்திகர்களிலும் உண்டு.அது எவ்வளவு % என்று தகவல்கள் இல்லை.

யாரையாவது ஆத்திகரை காட்டி இவர் இப்படி செய்கிறாரே என்றால் அவர் உண்மையான் ஆத்திகர் அல்ல ,போலி என்று ஆணித்தரமாக கூறவேண்டும்.
நான் இறை மறுப்பாளன் என்றால் என்னை பற்றி மட்டுமே நன்றாக அறிவேன்.பிறர் பற்றி தெரியாத விவரங்களை ஆதாரம் இல்லமல் கூறுவது இல்லை.

உங்கள் கருத்தை மறுத்தாலும் உங்களுக்கு இப்படி கூற இருக்கும் உரிமையை ஆதரிக்கிறேன்.இப்படி உலக் முழுதும் ஆத்திகர்கள் ஒன்றுபட்டு நாத்திகர்களை தினமும் 1000 பதிவு [மட்டும்]போட்டு திட்டினாலும் மகிழ்ச்சியே!!!

எனினும் பதிவுல்கத்திற்கு நல்வரவு.முதல் பதிவுக்கு வாழ்த்துகள்.இன்னும் நிறைய பேசுவோம்.
TM 17
நன்றி
Dear bro kindly remove the word verification box.Thanks

வெண்ணிற இரவுகள்....! said...

எனக்கு தெரிந்து மாலை போடும் ஐயப்ப பக்தர்கள் மலை ஏறி வந்துவிட்ட பிறகு நேராக போவது மது கடைக்கு.
ஜெயேந்திரன்,நித்தியானந்தன் போன்ற பொறுக்கிகள் கடவுள் பக்தர்களே . சரி நண்பரே கடவுளும் அதிகமாய்
இருக்கிறார்கள் பக்தர்களும் கோடிகளில் இருக்கிறார்கள் பின் ஏன் உலகத்தில் இத்தனை குழப்பம்.
திருப்பதி உண்டியலில் இருப்பது பணக்காரகளின் கருப்பு பணமே. சரி TASMAC கடைகளில் ஐயப்ப சாமிகளுக்கு
தனியாய் GLASS ஊற்றப்படுகிறதாமே.

NKS.ஹாஜா மைதீன் said...

சரியான விளக்கம்....நல்ல பதிவு சகோ....

'பசி'பரமசிவம் said...

நாம் ஒருவனை ஏமாற்றினால், இன்னொருவன் நம்மை ஏமாற்றுவன். அடுத்தவன் மனைவி மீது நாம் ஆசைப்பட்டால், அடுத்தவன் நம் மனைவி மீது கை வைக்க முயல்வான். இம்மாதிரி யதார்த்த சிந்தனைதான் மனிதனை நல்லவனாக வாழச் செய்யும்.

சட்டம் வழங்கும் தண்டனைக்குப் பயந்தும் குற்றம் புரிவது குறைகிறது.

ஒரே ஒரு நாள், உலகம் முழுக்கக் காவல் துறையைச் செயலற்றதாக்கிப் பாருங்கள்.கடவுளுக்குப் பயந்து எத்தனை பேர் குற்றம் புரியாமல் இருக்கிறார்கள் என்பது தெரியும்!

அதோடுகூட................

வலிமை உள்ளவனிடம் எவனும் வாலாட்டுவதில்லை. காரணம் தெரிந்ததுதான்.

“கடவுள் என்று ஒருவர் இல்லை” என்று அனைத்து மதத் தலைவர்களையும் ஒரு கூட்டறிக்கை வெளியிடச் சொல்லுங்கள். வெளியிட்டால்..............

உலகில் அதர்மம் தலைவிரித்து ஆடுமா என்ன?

அப்படி எதுவும் நடந்துவிடாது.

மனிதன் குற்றம் புரியாமல் இருப்பது, சமுதாயத்திற்குப் பயந்தும் சட்டத்திற்குப் பயந்தும்தான்.

மனிதர்களை நம்புங்கள்.சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கப் பழகுங்கள்.

மதவாதிகளால் அழிக்கப்பட்ட மதவாதிகள் லட்சோபலட்சம்!

அவர்களால் துன்புறுத்தப்பட்ட நாத்திகர்கள் எண்ணற்றோர்!

நாத்திகன் யாரைத் துன்புறுத்தினான்? கொலை செய்தான்?

“கடவுள் இல்லை” என்று தன் கொள்கையை மட்டும் சொல்லுகிற அவனை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?

இது இன்னும் விரிவாக விளக்க வேண்டிய மிக நுட்பமான தலைப்பு.

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

தொடரும் விவாதத்தில் நான் பங்கு கொள்ளப் போவதில்லை.

நன்றி.

Xyz said...

//“கடவுள் இல்லை” என்று தன் கொள்கையை மட்டும் சொல்லுகிற அவனை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?//

சபாஷ் சரியான கேள்வி?.. அப்பிடியே நாத்திகவாதிகளின் பதிவுகளுக்குபோய் "கடவுள் இருக்கிறார்" என்று தன் கொள்கையை மட்டும் சொல்லுகிற அவனை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? அப்பிடின்னு சொல்லி உங்கள் நடுநிலைமையை பறைசாற்றத்தயாரா..?

எல்லோருக்கும் சமநீதி கிடைக்கவேண்டுமென்பதுதானே நம் ஆசை நண்பரே..

மொக்க கவிதை எழுதிட்டிருந்த என்னை அறிவுபூர்வமா சிந்திக்க வைக்கிறாங்களே..அவ்வ்வ்வ்வ்வ்வ்

சிராஜ் said...

சகோ சார்வாகன்,

/* யாரையாவது ஆத்திகரை காட்டி இவர் இப்படி செய்கிறாரே என்றால் அவர் உண்மையான் ஆத்திகர் அல்ல ,போலி என்று ஆணித்தரமாக கூறவேண்டும்.
*/

நல்ல நியாயமான கேள்வி. தன் சார்ந்த மதக் கொள்கையை ஒருவர் பின்பற்றவில்லை என்றால் என்னை பொறுத்தவரை அவர் போலி தான். இதை ஏற்றுக் கொள்வதில் என்ன வெட்கம் வேண்டும் சகோ????
மற்ற மதங்களைப் பற்றி எனக்கு தெரியாது அல்லது நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இஸ்லாத்தை பொறுத்தவரை, முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறப்பதாலே யாரும் இறுதி வரை முஸ்லிமாகவே இருந்து விட முடியாது. பருவ வயதை எட்டியவுடன், இஸ்லாமிய வழியில் நடந்தால் மட்டுமே, இறைவனின் பார்வையில் அவன் முஸ்லிம். மற்றபடி பெயரை மட்டும் வைத்துக்கொண்டு பின்பற்றவில்லை என்றால், முஸ்லிம் என்று அவன் சொல்லிக்கொண்டு திரியவேண்டியது தான்.

டிஸ்கி : என் புரிதலில் தவறு இருந்தால் சகோதரர்கள் ஆதாரங்களுடன் கூறவும்.

சிராஜ் said...

சகோ பரமசிவம்,
/* ஒரே ஒரு நாள், உலகம் முழுக்கக் காவல் துறையைச் செயலற்றதாக்கிப் பாருங்கள்.கடவுளுக்குப் பயந்து எத்தனை பேர் குற்றம் புரியாமல் இருக்கிறார்கள் என்பது தெரியும்!
*/
நிச்சயமாக அதிகரிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் உலகில் உள்ள சமூக விரோதிகளில் பலர், சட்டத்திற்கு பயந்து தவறிழைக்காமல் இருக்கிறார்கள் அல்லது குறைவாக தவறு இழைக்கிறார்கள்.

ஆனால்... ஆனால்...எல்லோரும் நிச்சயம் தவறிழைக்க மாட்டார்கள். குறிப்பாக இஸ்லாத்தை சரியாக பின்பற்றுபவர்கள் கண்டிப்பாக தவறு செய்ய மாட்டார்கள்.
எப்படி நம்புவது??? யாரை நம்புவது??? என்ற கேள்வி வருகிறதா??? நிச்சயம் வரும். அது நல்ல கேள்வியும் கூட.

உதாரணம்.. நான் தான் சகோ. சிலப் பல வருடங்களுக்கு முன் நான் தினமும் 15 சிகரெட் பிடிப்பேன். வாரம் ஒரு முறை தண்ணி அடிப்பேன், குறைந்த பட்சம். இன்று இவை அனைத்தையும் விட்டு , கிட்ட தட்ட 10 வருடங்கள் ஆகி இருக்கும். ஒருமுறை கூட சிகரெட்டை நான் வாயில் வைத்தது கிடையாது. இதை எந்த உலக போலிசும் எனக்கு சொல்லித்தரவில்லை அல்லது யாருக்கும் பயந்து நான் விடவில்லை. இஸ்லாத்தை படித்து, உண்மையான இஸ்லாத்தை அறிந்துகொண்டவுடன், நானாகவே விட்டுவிட்டேன்.

இப்பொழுது சொல்லுங்கள். இஸ்லாம் என்னை பன்படுத்தி உள்ளதா? இல்லையா???

mohamedali jinnah said...

Religion is a faith which is necessary for a human being to have a good life and If you do not have it then you can not follow any religion and lead a good life.

farook said...

//நல்ல போட்டோவா தர்றேன்***

உங்க கடவுள் இதெல்லாம் செஞ்சா தப்பு இல்லை, இதை வச்சு காமெடி பண்ணுங்கனு சொல்லிக்கொடுத்து இருக்காரா?

இல்லை உங்க மதம் சொல்லிக்கொடுத்ததா?

ஏதோ பெரிய யோக்கியன் மாதிரி பேசுறீங்க? இதுபோல் தப்புக்களை தப்புனு தெரியாமல் என்னத்தை மதநூல் படிச்சு கிழிச்சீங்க?//

உங்களுக்கு தான் மதமே புடிக்கதே அப்புறம் எதுக்கு இந்த மத்த்தில் அதுன் இதுன் காமெடி பண்ணுரிங்கா

'பசி'பரமசிவம் said...

’முட்டாள்’ என்னும் பெயர் கொண்ட நல்ல சிந்தனையாளரே,
இந்த விவாத மேடையில், நாத்திகவாதிகளும் கலந்து கொள்கிறார்கள்.
எனவே,
இங்கேயே பறைசாற்றுகிறேன்........
“கடவுளை நம்புகிறவரை வம்புக்கு இழுப்பது தவறு...தவறு...தவறு...
’கடவுளை நம்பு’என்று நம்மை வற்புறுத்துபவரை எதிர்த்து வாதிடுவதில் தவறே இல்லை”
போதுமா சிந்தனையாளரே?
தங்களை முட்டாள் என்று சொல்ல எனக்கு உண்மையிலேயே விருப்பம் இல்லை நண்பரே.

யாஸிர் அசனப்பா. said...

good post. keep on posing. could not believe that this is your second post. great job

சார்வாகன் said...

@சகோ சிராஜ்
/நல்ல நியாயமான கேள்வி. தன் சார்ந்த மதக் கொள்கையை ஒருவர் பின்பற்றவில்லை என்றால் என்னை பொறுத்தவரை அவர் போலி தான். இதை ஏற்றுக் கொள்வதில் என்ன வெட்கம் வேண்டும் சகோ????/
மனிதாபிமானிக்கு பதிலாக பதில் சொல்வதற்கு நன்றி.அது கேள்வி அல்ல ஆலோசனை.அது ஏற்கெனவே பயன் பாட்ட்டில் உள்ளது என்று நிரூபித்ததற்கு நன்றி.
******
//இஸ்லாத்தை பொறுத்தவரை, முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறப்பதாலே யாரும் இறுதி வரை முஸ்லிமாகவே இருந்து விட முடியாது.//
இஸ்லாமின் படி உல்கில் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே முஸ்லிமே.வேண்டுமானால் விவரம் அறிந்தவர்களிடம் கேளுங்கள். சான்று வேண்டுமானல் புஹாரியில் இருந்து தருகிறேன்.
//என் புரிதலில் தவறு இருந்தால் சகோதரர்கள் ஆதாரங்களுடன் கூறவும்.//
Buhari
1358. இப்னு ஷிஹாப் அறிவித்தார்.
இறந்துவிட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தப்படும். அது விபச்சாரிக்குப் பிறந்ததாக இருந்தாலும் சரியே! ஏனெனில் அது இயற்கையாகவே இஸ்லாத்திலேயே பிறக்கிறது.
பெற்றோர் முஸ்லிம்களாக இருந்து அல்லது குறிப்பாகத் தந்தை மட்டும் முஸ்லிமாகவும் தாய் வேற்று மதத்தவளாகவும் இருந்து அவர்களின் குழந்தை பிறக்கும்போது சப்தமிட்டு, பிறகு இறந்தால் அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படும்; சப்தமிடவில்லையாயின் அதற்குத் தொழுகையில்லை; ஏனெனில் அது விழுகட்டியாகும்.
விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கே சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) 'எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலின் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தையும் ஓதிக்காட்டினார்.
Volume :2 Book :23
*******
1359. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தை ஓதிக்காட்டினார்.
Volume :2 Book :23

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சார்வாகன்,
உங்கள் பின்னூட்டத்திலேயே உங்கள் கேள்விக்கு பதில் உள்ளது.
ஆனால், அது உங்கள் கருத்துக்கே எதிரான பதில். உங்கள் பின்னூட்டத்தை நீங்கள் ஒருமுறை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சார்வாகன் said...
This comment has been removed by the author.
சிராஜ் said...

சகோ சர்வாகான்,
உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

/*******************மனிதாபிமானிக்கு பதிலாக பதில் சொல்வதற்கு நன்றி **********************/
உங்களுடைய பின்னூட்டங்கள் தொடர்பாகவே உங்களுடன் நான் விவாதிக்கிறேன். மனிதபிமானிக்காக அல்ல. உங்களுக்கே தெரியும் நான் இவ்வாறு செய்வது முதல் முறை இல்லை என்று.

/************ இஸ்லாமின் படி உல்கில் பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே முஸ்லிமே.வேண்டுமானால் விவரம் அறிந்தவர்களிடம் கேளுங்கள் ***************/
நூற்றுக்கு நூறு உண்மை. இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை சகோ. மிகச் சரியாகவே கூறி உள்ளீர்கள்.

இப்பொழுது என்னுடைய பின்னூட்டத்தை ஒரு முறை பார்த்து விடுவோம்.

/************சிராஜ் @சர்வாகான்
சகோ சார்வாகன்,

/* யாரையாவது ஆத்திகரை காட்டி இவர் இப்படி செய்கிறாரே என்றால் அவர் உண்மையான் ஆத்திகர் அல்ல ,போலி என்று ஆணித்தரமாக கூறவேண்டும். - சார்வாகன்*/
நல்ல நியாயமான கேள்வி. தன் சார்ந்த மதக் கொள்கையை ஒருவர் பின்பற்றவில்லை என்றால் என்னை பொறுத்தவரை அவர் போலி தான். இதை ஏற்றுக் கொள்வதில் என்ன வெட்கம் வேண்டும் சகோ????
மற்ற மதங்களைப் பற்றி எனக்கு தெரியாது அல்லது நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இஸ்லாத்தை பொறுத்தவரை, முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறப்பதாலே யாரும் இறுதி வரை முஸ்லிமாகவே இருந்து விட முடியாது. பருவ வயதை எட்டியவுடன், இஸ்லாமிய வழியில் நடந்தால் மட்டுமே, இறைவனின் பார்வையில் அவன் முஸ்லிம். மற்றபடி பெயரை மட்டும் வைத்துக்கொண்டு பின்பற்றவில்லை என்றால், முஸ்லிம் என்று அவன் சொல்லிக்கொண்டு திரியவேண்டியது தான்.

*******************/
நான் குழந்தைகளைப் பற்றி பேசவே இல்லையே சகோ. பருவ வயதை எட்டியவுடன் என்று தெளிவாக குறிப்பிட்டு உள்ளேனே, கவனிக்கவில்லையா? ஆகவே இந்த பின்னூட்டத்தை பொறுத்தவரை உங்கள் வாதம் தவறு.

ஆனால், இந்த இடத்திற்கு பொருந்தாவிட்டாலும், அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் ஹதீதை இவ்வளவு விரைவாக கண்டுபிடித்து போட்டுள்ளீர்கள் அல்லவா. அதற்காக உண்மையிலே நான் உங்களை
மனம் திறந்து பாராட்டுகிறேன் சர்வாகான். GOOD WORK .

சார்வாகன் said...

சகோ சிராஜ் நன்றி
விளங்கியது ஆனால் நீங்கள் குறிப்பிட்டது முஸ்லிம் பெற்றோர் ப‌ற்றி மட்டுமே இது பிறருக்கும் பொருந்தும் என்பதையே சுட்டினேன்.
இபோது ஒருவர் இப்படி இருக்கிறதுஆகவே பிறரும் ஏற்கவேண்டும் என்று வாதிட்டால் சிக்கல் ஆகும்.
அவ்வளவுதான்
.இப்படி கொஞ்சம் இஸ்லாம் கற்று இருப்பதால் நம் நண்பர்கள் என்னை என்று அன்புடன்(?!)சார்வாகான் என‌ அழைக்கிறார்கள்.உண்மையில் நம் பெயர் சார்வாகன்[இந்திய தத்துவ மரபில் முதல் பொருள் முதல்வாதக் கொள்கை].
நன்றி

சிராஜ் said...

/**********
ஸலாம் மு.ஆஸிக்
மனிதாபிமானிக்கு கருத்து தெரிவித்தால் சகோ சிராஜ் பதில் சொல்ரார்.
சகோ சிராஜ்க்கு விளக்கம் சொன்னால் நீங்கள்.உங்களுக்கும் நன்றி
*********/
சரி நான் கேள்வியே கேட்க‌வில்லை.சிராஜ் சொன்னதை மறுத்து இருக்கிறேன்.ஆகவே என் கேள்வி என எதை நினைக்கிறீர்களோ அதை சொல்லி பதில் சொல்லுங்கள்.அடுத்து யார் வருவார்?
****************/

அடுத்து நானே தான் சகோ வருவேன். நாமெல்லாம் ஒரே அறையில் இருந்துகொண்டா பின்நூட்டமிட்டுக்கொண்டு இருக்கிறோம்? சகோ. ஆசிக் சவுதியில் இருக்கிறார், நான் சென்னை, நீங்கள் எங்கு என்று தெரியவில்லை. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒருவர் மற்றவருக்காக பதிலளிப்பது இயல்புதான். ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் பின்பற்றுவது கொஞ்சம் கஷ்டம் தான் சர்வாகான்.

மற்றபடி உங்களுடைய ஹதீஸ் சம்பந்தமான கேள்விக்கு எனது சென்ற பின்னூட்டத்தில் பதில் சொல்லிவிட்டேன் சகோ.

சிராஜ் said...

சலாம் சகோ முஹம்மத் ஆசிக்,
இனி உங்களை முழுப் பெயர் கூறியே அழைக்கலாம் என்று இருக்கிறேன். சிலர் நீங்கள் மற்றும் எதிர்க்குரல் ஆசிக் அஹமது இடையே குழப்பம் அடைவதால். சரிதானே????

பின்னூட்டங்களுக்கு நன்றி சகோ.

சிராஜ் said...

எப்பா ப்ளாக் ஓனரு,

கொஞ்சம் வந்து பின்னூட்டங்களுக்கு பதில் சொல்றது??????

சிராஜ் said...

வருண்,

இந்த கருத்தை நான் வரவேற்கிறேன். உண்மையிலே ஆக்கப்பூர்வமான கருத்து.

naren said...

நண்பர் சிராஜ்,

வால்பையன் அந்த கமெண்டை தான் போடவில்லை என்று அதே செங்கோடி பதிவில் சொல்லியிருக்கிறார். செங்கோடி பதிவில் வால்பையன் போடும் கமெண்ட் அனைத்திலும் பெயர் அழுத்தினால் அவருடைய பிரோபைல் வரும். நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டத்தில் அவ்வாறு வரவில்லை.

இந்த மாதிரி குற்றச்சாட்டை ஒருவர் மீது சுமத்தும்போது முடிந்தால் அவரிடம் விளக்கம் கேட்பது நன்று. ஏன் என்றால் இணையத்தில் ஏதுவுமே நடக்கலாம்.

நன்றி

காவ்யா said...

கடவுள் பக்தியிருப்பவர்கள் நல்லவர்களாக வாழ்கிறார்கள்; வாழ்வார்கள். மற்றவர்கள் காட்டுமிராண்டிகளாக ,அதாவது தான் தோன்றித்தனமாக கெட்ட செயல்களை விரும்பிச்செய்து வாழ்பவர்களாவார்கள். இதுதானே உங்கள் சாராம்சம் ?

நன்று. உலகில் ஆத்திகர்களே முழுக்க. நாத்திகர்கள் சிலரே. உங்கள் கருத்தின்படி உலகம் எல்லா நற்குணங்களுமுடைய சுவர்க்க பூமியாக இருக்கும். தமிழ்கம் அப்படியிருக்கும். உண்மையென்ன ? ஆத்திகர்களை ஆத்திகர்கள் கொல்கிறார்கள். மதச்சண்டைகளில் மரித்தோர் எண்ணிக்கை இரு உலகப்போர்களில் மரித்தோர் எண்ணிக்கையைவிட அதிகம். உல்கமெங்கும் நடக்கும் போர்கள் தூண்டியவர்களும், கொல்பவர்க்ளும் ஆத்திகர்களே. இலங்கைப்புலிகள் தமிழ்ச்சைவ் மதத்தைச்சார்ந்தவ்ர்கள்; அவர்களைக்கொன்றவர்கள் புத்தமதத்தைச்சார்ந்த சிங்கள்ர்கள். இது ஒரு எ கா மட்டுமே.

இப்படி உலமெங்கும் கொலை, கொள்ளை, என அனியாயங்கள். ஆத்திகர்களாலேயே நடாத்தப்பட்டுவருகிறது. கணிதவிதிப்படி நாத்திகர்கள் நெகிலிஜிபில் நம்பர்.

ஆக உங்கள் ஆத்திகர்களே நல்லோர் என்ற தியர் காற்றில் பறந்து காணாமல் போகிறது.

மனிதாபிமானி said...

சலாம் சகோ.....
பின்னூட்டங்களுக்கு நான் பதிலளிக்கத்தான் விரும்பினேன். ஆனால், நீங்களும், சகோ. (பின்னூட்டவாதி) ஆஸிக்கும் மற்ற நண்பர்களும் அழகிய முறையில் பதில் சொல்வதை பார்த்ததும் நான் கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். இதைவிடவா நான் பதில் சொல்லிவிட முடியும்? நன்றி சகோ.

G u l a m said...

நம் அனைவர் மீதும் சாந்தி நிலவட்டுமாக.,

இங்கு ஆத்திகர்களை விமர்சிக்கும் அனைத்து சகோதரங்களுக்கும் ஒரு சிறிய நினைவூட்டல். !

நாத்திகர்களால் விளையும் தீமைகளை விட ஆத்திகர்களால் விளைவும் தீமைகளே அதிகம் என்பதைப்போல கோட்டிட்டு காட்டுகிறீர்கள். சரி உண்மையென்றே வைத்துக்கொள்வோம்.

அவை முன்னிலைப்படுத்தி பெரிதாக்கப்படுவதற்கான காரணம்???

சமூகத்தில் பெரும்பான்மை நபர்கள் செய்யும் செயல்களின் விளைவே பிரதானமாக பேசப்படும். ஆக நாத்திகர்கள் எனும் சிறுபான்மை மக்கள் செய்யும் தவறுகள் மதம் சார்ந்த பெரும்பான்மை ஆத்திக நபர்கள் செய்யும் தவறுகளால் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஆக நாத்திகர்கள் ஆத்திகர்கள் இருதரப்பிலும் தவறுகள் நடந்தேற தான் செய்கின்றன. எதார்த்தமாக எண்ணிப்பார்த்தால் நிதர்சனமாக புரியும்.

ஆனால்!
நாத்திகர்கள் எதையும் சிந்தனைரீதியாக எடுத்துக்கொண்டு செயல்படுத்துவதாக கூறி சமூகத்தில் உலா வருகின்றனர். அவர்களுக்கென தனிமனித கட்டுபாடுகள் எதுவும் அவர்களின் மனதளவை தாண்டி இல்லை. பெரும்பாலான நேரங்களில் அவரது மனங்கள் சரியான முடிவை தந்தாலும் அவர்களின் மனசாட்சியால் நூறு சதவீகிதம் முழுமையான தீர்வை எல்லா நிலைகளிலும் தர முடியாது! >>> அஃது எப்படி என்பதையும்...

சரி மதங்களை நம்பும் ஆத்திகர்களும் தவறு செய்கிறார்கள் அது மட்டும் எப்படி நியாயமாகும்?
சரிதான் ஆனால் அதற்கு காரணம் கடவுளா ? மனிதனா?

மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவானவையாக இருப்பினும் அதனைப் பின்பற்றுவோர் அனைவரும் நல்லவர்களாக இல்லையே...? -அப்படியென்றால் மதங்களின் ஊடான கடவுளின் ஆளுமை மக்கள் மீது இல்லையா...? தவறு செய்யும் மதம் சார்ந்த நபர்களை பார்க்கும்போது...
கடவுள் ஏன் அவர்களை தண்டிக்கவில்லை அப்படி
கண்டிக்காத கடவுள் நமக்கு ஏன் இருக்க வேண்டும் ?

இப்படி ஒரு பொது நிலை கேள்வி எல்லோர் மனதிலும் உதிப்பது இயல்பே... இந்த கேள்விகளை மட்டும் வைத்துக்கொண்டு கடவுள் இல்லையென்பது அல்லது ஆத்திகத்தை விமர்சிப்பது என்பது தவறான புரிதலாக தான் இருக்குமென நினைக்கிறேன்.

கடவுள் நாத்திகம் குறித்த என்னின் சில புரிதல்களையும் பதிவுகளாக இங்கே பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

http://iraiadimai.blogspot.com/

உங்கள் ஓய்வு நேரங்களில் பார்வையிடுங்கள். எதிர்க்கருத்து இருப்பின் பதிவு செய்யுங்கள் இறை நாடினால் காத்திருக்கிறேன்.

மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற

THE UFO said...

அடடடடட. இதுவரீக்கும் யாருமே சொல்லாத கருத்த சொல்லி புட்டாரே. புது அறிவியல் கண்டுபிடிப்பை எல்கேஜி புள்ளைக்கு சொல்லி குடுத்துட்டாரு. அலோ. naren: வால்பையன் அந்த கமெண்டை போடலைன்னு நீங்க சொல்றத எப்படி நம்புறது. அவரே விளக்கம் சொன்னாலும் எப்படி நம்புறது. எனக்கு பகுத்தறிவு இருக்குலே.

THE UFO said...

என்னோடைய முதல் கமெண்டுக்கு இது உதாரண விளக்கம் பாய். நல்லா படிங்க. திருடன் இடத்திலே நாத்திகரை போடுங்க. போலிஸ் யூனிபார்ம்ல திருடர ஆளுக்கு போலி ஆத்திகரை போடுங்க. லஞ்சம் வாங்காத போலிசு எடத்துல ஆத்திகரை போடுங்க. நம்ம பாயின்ட் என்னன்னாக்க: கடவுள் பயம் உள்ளவன் நாமலே வழிய பொய் குடுத்தாலும், லஞ்சம் வாங்க மாட்டன். அவ்ளோதான் பாய்.

இப்போ மருவாட்டி படிங்க பாய். இம்புட்டு தெளிவா சொல்லீக்கிறேன். இதுகூட புரியலையா?

THE UFO said...

#மயிரையும் புடுங்க முடியாது#
ஓஹோ. சிராஜ் பாய், இதுக்கே கடுப்பான எப்பிடி? அந்த ஆளு வாய தொறந்தா கூவம். அவர் பிளாக்குலே பழசை படிச்சு பாருங்க. கண்டிஷன், வெறும் வயித்தோட போகணும். சாப்டுட்டு போய் படிச்சிட்டு கம்பியுட்டறு மேலே வாந்தி எடுத்து வச்சிங்கன்னா அப்புறம் நான் பொறுப்பு இல்லே.சொல்லி புட்டேன் ஆமா.

THE UFO said...

காவ்யா சிஸ்டர்.
மேலே திருடன் போலிஸ் உதாரணம் சொல்லியும் இன்னொரு கமேண்ட? நெஜமாலுமே நாம சொல்றது புரியலையா?

சரி, மறுக்கா ஒருவாட்டி சொல்றேன்.

சிஸ்டர் காவ்யா, சிங்கிளா ஸ்கூட்டில ஹெல்மெட் போட்டுக்கிட்டு இருபதுல போறீங்க. நடுரோட்ல ஒரு இன்ஸ்பெக்டர் உங்க கிட்டே லைசன்ஸ், ஆர் சி புக், இன்சுரன்ஸ், ஹெட்லைட் கருப்பு ஸ்டிக்கர், நம்பர் பிளேட் பெயின்ட், எல்லாமே செக் பண்ணிட்டு.. எல்லாமே கரீக்டா இருந்தாலும், 'மாசக்கடைசிமா', 'நீ ஓவர் ஸ்பீடு மா', 'கட்டு நூறு ரூபா'நா, அந்த கவர்மென்ட் கட்டளைக்கு மாறான டிராபிக் போலிசை போலிசுன்னு சொல்விங்களா, திருடன்னு சொல்விங்கள?

அத்தேதான். கடவுள் கட்டளைக்கு மாறா குற்றம் செய்றவன் எல்லாம் கடவுள் பயம் இல்லாதவன். நாத்திகன். ஓகேவா? இதுக்கு மேலே நான் யாருக்கும் பதில் சொல்றதா இல்ல.

naren said...

UFO, வால்பையனுக்கும் உங்களுக்கும் star wars நடப்பது, இருப்பது தெரியாமப் போச்சு..இப்ப தெரியுது புரியுது...
உங்க பகுத்தறிவை எல்.கே.ஜி. புள்ளைக்கு புது அறிவியல் கண்டுபிடிப்பை சொல்லிகுடுப்பதைப் போலச் சொல்லிகிட்டே இருங்க.

VANJOOR said...

சொடுக்கி கேளுங்க‌ள்

>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<

.

rajan said...

//அவர்கள் இந்த மண்ணில் சொர்க்கத்தை படைக்கலாம் என்று சொல்வதன் அர்த்தம் அவர்கள் சொர்க்கமாக நினைக்கும் மது, மாது போன்றவற்றை தடையின்றி அணுகலாம் என்பதால்தான். மதத்தில் இருந்தால் இதையெல்லாம் தொட தடையிருக்கிறதே?//

அவர்கள் நினைப்பது இருக்கட்டும், உங்க‌ளுக்கு சொர்க்கம் என்றாலே மது & மாது தான் ஞாபகம் வருகிறது போலும். கொஞ்சம் பொறுங்கள் ஐயா, மறுமை நாள் வரட்டும்.

rajan said...

@ சிராஜ்

//கிட்ட தட்ட 10 வருடங்கள் ஆகி இருக்கும். ஒருமுறை கூட சிகரெட்டை நான் வாயில் வைத்தது கிடையாது. இதை எந்த உலக போலிசும் எனக்கு சொல்லித்தரவில்லை அல்லது யாருக்கும் பயந்து நான் விடவில்லை. இஸ்லாத்தை படித்து, உண்மையான இஸ்லாத்தை அறிந்துகொண்டவுடன், நானாகவே விட்டுவிட்டேன்.//

முஸ்லிம் ஆண்களில் கணிசமான பங்கினர் உண்மையான இஸ்லாத்தை அறிந்துகொண்டதில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்களா ?

magesh said...

ella naathiganum ore mathiri irupaathillai.
atheypol ella aathiganum ore mathiri iruppathillai.
aanal innaiku aathigargal(samiyargal) melathan neenga sonna ella thappugalukana case file aagi iruku.
so, aathigana irunthu asingam pannama
naathigana irunthu nallathu pannalam